Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்
    மாநிலம்

    சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் மண்டல அளவில் கனிமொழி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் என 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு, தொடர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு முதலே தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் தொடங்கி விட்டது.

    அந்தவகையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

    அக்குழுவினர், மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஒன்றிய அளவி்ல் பொறுப்பாளர்கள் நியமிப்பது, மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைக்கு பரிந்துரைகளை அளித்தனர்.

    இதையடுத்து, தற்போது மாவட்ட வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பூத் கமிட்டி உறுப்பிரனர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆயத்தப் பணிகளை திமுக முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, தற்போது மண்டல அளவில் தேர்தல் பணிகளை விரைவுபடுத்த பொறுப்பாளர்களை திமுக தலைமை முடிவெடுத்து, அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுள்ளனர்.

    இதற்காக 7 மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பாளராகியுள்ளார்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சக்கரபாணி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மண்டலவாரியாக மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் என்பது வழக்கமான ஒன்று என்றாலும், அந்தந்த மண்டலங்களில் வாழும் சமுதாயத்தினரை பிரதிபலிக்கும் வகையில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    மண்டல பொறுப்பாளர்கள் முதல்கட்டமாக ஒன்றிய அளவில் 1,244 சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து வேட்பாளர்கள் தேர்விலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமார் துயரம் மறைவதற்குள் மீண்டும் சட்டத்தை மீறும் காவல் துறை: அண்ணாமலை கண்டனம்

    July 10, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்

    July 10, 2025
    மாநிலம்

    படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? – அரசுக்கு விஜய் எச்சரிக்கை

    July 10, 2025
    மாநிலம்

    “தே.ஜ. கூட்டணியால் திமுக அரசு முழுமையாக தோற்கடிக்கப்படும்” – ஹெச்.ராஜா கருத்து

    July 10, 2025
    மாநிலம்

    திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!

    July 10, 2025
    மாநிலம்

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமார் துயரம் மறைவதற்குள் மீண்டும் சட்டத்தை மீறும் காவல் துறை: அண்ணாமலை கண்டனம்
    • ரேகா: ‘ரேகா ஜி’ இலிருந்து கற்றுக்கொள்ள 5 பாணி பாடங்கள்
    • கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
    • முன்னாள் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முஹம்மது 6 பழக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அவர் தனது நீண்ட ஆயுள் ரகசியம் என்று அழைக்கிறார்
    • குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.