Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
    மாநிலம்

    சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கல் குவாரி, மணல் குவாரி பஞ்சாயத்துகளில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், வறுமை மீட்புக்காக வழங்கப்பட்ட கல் உடைப்பு உரிம விவகாரத்தை வைத்து தேனி மாவட்டத்திலும் அண்மையில் ஒரு கொலை நடந்திருக்கிறது.

    கம்​பம் அருகே உள்ள காமயக​வுண்​டன்​பட்டி பேரூ​ராட்​சி​யில் சங்​கி​லிக்​கரடு அமைந்​துள்​ளது. இதில், மூவா​யிரம் ஆண்​டு​கள் பழமை​யான பாறை ஓவி​யங்​கள் அதி​கம் உள்​ளன. சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு இப்​பகுதி மக்​களின் வறுமையை போக்​கும் வித​மாக இந்​தக் கரட்​டில் கல் உடைத்து வரு​வாய் ஈட்​டிக் கொள்ள அரசே அனு​மதி அளித்​தது. இதற்​காக இந்​தக் கரட்​டுப் ​பகு​தியை ஆறு பாகங்​களாக பிரித்து ஒவ்​வொரு பாகத்​தி​லும் ஒவ்வொரு குழு​வினர் கற்​களை வெட்டி எடுத்து விற்று வந்​தனர்.

    இந்​நிலை​யில், இப்​பகுதி மேகமலை புலிகள் காப்​பக​மாக 2021-ல் அறிவிக்​கப்​பட்​ட​தால் சங்​கி​லிகரட்​டில் கல் உடைக்க தடை விதிக்​கப்​பட்​டது. இதனால் தங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படு​வ​தாக இங்கு கல்​லுடைத்து வந்த மகளிர் சுயஉதவிக் குழு​வினர் கோரிக்கை எழுப்​பினர். இவர்களுக்கு பெரிய அளவில் பொருளா​தா​ரப் பின்​னணி இல்​லாத​தால் இவர்​கள் பெயரைச் சொல்லி இப்​பகு​தி​யைச் சேர்ந்த அரசி​யல்​வா​தி​கள் கல்​குவாரியை மீட்​கும் வேலை​களில் இறங்​கினர். இது தொடர்​பாக தொடரப்​பட்ட வழக்​கில், இப்​பகுதி மீண்​டும் வரு​வாய்த் ​துறை​யின் கட்டுப்பாட்டுக்குள் வந்​தது.

    இதையடுத்து 2022 முதல், மீண்​டும் கல் உடைக்​கும் பணி தொடங்​கியது. இம்​முறை மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்​கும் கல் உடைக்க அனுபவ பாத்தி​யம் உள்ள சிலருக்​கும் ஒரு தொகை​யைக் கொடுத்​து​விட்டு அரசி​யல் புள்​ளி​களே கல்​கு​வாரி​களை கைப்​பற்​றினர்.

    இந்​நிலை​யில், அனுபவ பாத்​தி​யக்​கார​ரான சசிகு​மார் என்​பவர் அதி​காரப் புள்​ளி​களுக்கு கட்​டுப்​ப​டா​மல் தாங்​களே கல் உடைத்து விற்​பனை செய்து கொள்​வ​தாக தெரி​வித்​திருக்​கி​றார். சசிகு​மார் தமிழ் தேசிய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் கம்​பம் நகரச் செய​லா​ளர் என்​ப​தால் இவருக்கு ஆதர​வாக அந்தக் கட்​சி​யும் களத்​தில் குதித்​தது. இதையடுத்​து, எதிர்த்​தரப்​பானது பேச்​சு​வார்த்​தைக்​காக சசிகு​மாரை அழைத்​திருக்​கிறது. அப்​படிப் பேச்சுவார்த்தைக்​குப் போன இடத்​தில் தான் சசிகு​மாரை கத்​தி​யால் குத்​திக் கொலை செய்​திருக்​கி​றார்​கள்.

    இந்​தக் கொலைக்கு நியா​யம் கேட்டு சாலை மறியல் உள்​ளிட்ட போராட்​டங்​கள் தலை​தூக்​கிய​தால் சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினையை சமாளிக்க கல்​கு​வாரி​களை தற்​காலிக​மாக இழுத்து மூடி​யிருக்​கிறது அரசு.

    இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தமிழ் தேசிய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் தேனி மாவட்​டத் தலை​வர் ராஜ்கு​மார், “250 ஏக்​கர் கொண்ட இந்த சங்கிலிக்​கரடில் ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை மனதில் வைத்து அவர்களுக்கு கல் உடைக்​கும் உரிமம் வழங்​கப்​பட்​டது. ஆனால், காலப் போக்கில் இந்​தக் குவாரி​களானது திமுக-வைச் சேர்ந்த குரு இளங்​கோவன், கம்​யூனிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த ராஜேந்​திரன் உள்​ளிட்ட அரசி​யல் பிரமுகர்​களின் கட்​டுப்​பாட்​டுக்​குள் போய்​விட்​டன. அனுபவ பாத்​தி​யக்​காரர்​களில் ஒரு​வ​ரான சசிகு​மார் தனது உரிமையை அவர்​களுக்கு விட்​டுத்தர மறுத்​த​தால் அவரை பேச்​சு​வார்த்​தைக்கு வரச்​சொல்லி கொலையே செய்​து​விட்​டார்​கள்” என்​றார்.

    சசிகு​மார் கொலை​யில் சின்​னச்​சாமி, குரு இளங்​கோ, ராஜாமணி உள்​ளிட்ட 7 பேரை கைது செய்​திருக்​கிறது போலீஸ். ஏழை​களின் வாழ்வாதாரத்துக்காக வழங்​கப்​பட்ட கல் குவாரி உரிமையை அரசி​யல்​வா​தி​கள் கைப்​பற்​றிக் கொண்டு கேரளா​வுக்கு கனிம வளத்​தைக் கடத்தி கொள்ளை லாபம் சம்​பா​திப்​பது கீழ் மட்​டத்​தி​லிருந்து மேல் மட்​டம் வரைக்​கும் அனைத்து அதி​காரிகளுக்​கும் தெரிந்தே நடப்​ப​தாகச் சொல்​பவர்​கள், “பணம் பாதாளம் வரைக்​கும் பாய்​கிற​போது யாரால் என்ன செய்​ய முடி​யும்?” என்று ஆதங்​கக் கேள்வி எழுப்​புகிறார்​கள்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

    September 3, 2025
    மாநிலம்

    மீலாது நபி, தொடர் விடுமுறை: 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    September 3, 2025
    மாநிலம்

    தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு

    September 3, 2025
    மாநிலம்

    விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

    September 3, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 3, 2025
    மாநிலம்

    மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு
    • தேங்காய் நீர் அல்லது பழச்சாறு: எடை இழப்புக்கு எந்த நீரேற்றம் பானம் சிறந்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மீலாது நபி, தொடர் விடுமுறை: 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
    • வைட்டமின் மின் எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சி, உச்சந்தலையில் ஆரோக்கியம் மற்றும் பிரகாசிக்க உதவுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.