Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை: உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    மாநிலம்

    கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை: உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை: உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: கோவை – கடைவீதி காவல் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தற்கொலை கொண்ட விவகாரம் தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    கோவை மாநகர காவல் துறைக்குட்பட்ட கடைவீதி காவல் நிலையம் வைசியாள் வீதியில் உள்ளது. இங்கு சட்டம் – ஒழங்கு, விசாரணைப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு நேற்று (ஆக.5) நள்ளிரவு பணியில் இருந்த தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு தெரியாமல், அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவர், உதவி ஆய்வாளரின் அறைக்குள் நுழைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று (ஆக.6) காலை இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.

    மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் பேரூர் அருகேயுள்ள சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) எனத் தெரிந்தது. திருமணமாகாத அவர், பேரூரில் தனது சகோதரி குடும்பத்தினருடன் தங்கி, கட்டுமான வேலைக்குச் சென்று வந்த தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    இவர் தன்னை யாரோ தாக்க பின்தொடர்வதாக கூறி, காவலர் செந்தில்குமாரிடம் நள்ளிரவில் புகார் தெரிவித்துள்ளார். அவர் விசாரித்து அனுப்பிய பின்னர், அவருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து அறிவொளி ராஜன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை ஜே.எம்.5-வது மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினர். வருவாய்த் துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக கடைவீதி போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக தலைமைக் காவலர் செந்தில்குமார், விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் இன்று மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

    கடைவீதி காவல் நிலையம் | படம்: ஜெ.மனோகரன்

    ‘லாக்கப் டெத் கிடையாது’ – முன்னதாக, இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் கூறும்போது, ‘‘பணியிலிருந்த காவலருக்கு தெரியாமல், சாலையை பார்த்தவாறு உள்ள முதல் தளத்தின் படிக்கட்டில் ஏறி அறிவொளி ராஜன் உள்ளே நுழைந்து, விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளரின் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு, தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தான் இந்த விஷயமே தெரியவந்துள்ளது.

    இதை லாக்கப் டெத் எனக் கூற முடியாது. இது காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை வழக்காகும். அறிவொளி ராஜன் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தன்னை யாரோ பின்தொடர்வதாகவும், தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினரிடமும் தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நபர் 11.04 மணிக்கு டவுன்ஹாலில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து 10 நிமிடம் அமர்ந்துள்ளார். 11.16 மணிக்கு ஒப்பணக்கார வீதி போத்தீஸ் நோக்கி ஓடியுள்ளார். 11.18 மணிக்கு பிரகாசம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார். 11.19 மணிக்கு கடைவீதி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களே இல்லை” – நயினார் நாகேந்திரன் சாடல்

    August 6, 2025
    மாநிலம்

    தென் மாவட்டங்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

    August 6, 2025
    மாநிலம்

    தவெக மதுரை மாநாடு: காவல் துறை கேள்விகளுக்கு ஆனந்த் நேரில் விளக்கம்

    August 6, 2025
    மாநிலம்

    அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு வழக்கு

    August 6, 2025
    மாநிலம்

    “முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு 50 மார்க் தான்” – பிரேமலதா விஜயகாந்த் மதிப்பீடு

    August 6, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    August 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களே இல்லை” – நயினார் நாகேந்திரன் சாடல்
    • சபிசாச்சியின் 2025-26 தொகுப்பிலிருந்து 10 மூச்சடைக்கக்கூடிய திருமண லெஹங்காக்கள்
    • டெல்லி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஐபோன் 16 புரோ – நெட்டிசன்கள் கொந்தளிப்பு
    • பள்ளிகளிலேயே ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
    • தென் மாவட்டங்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.