Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோவில்பட்டியில் இம்முறை கொடிநாட்டுமா திமுக? – உற்சாகத்துடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!
    மாநிலம்

    கோவில்பட்டியில் இம்முறை கொடிநாட்டுமா திமுக? – உற்சாகத்துடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!

    adminBy adminAugust 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவில்பட்டியில் இம்முறை கொடிநாட்டுமா திமுக? – உற்சாகத்துடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார். அவரால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளரை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்தார். தினகரனுக்கு இருந்த அந்த நம்பிக்கைகூட திமுக-வுக்கு இன்னும் இந்தத் தொகுதி மீது ஏற்படவில்லை. காரணம், இதுவரை ஒருமுறைகூட இங்கே திமுக கொடிநாட்ட முடியாமல் இருப்பது தான்.

    தீப்பெட்டி ஆலைகளும் 2 பெரிய நூற்பாலைகளும் உள்ள கோவில்பட்டி தொகுதியில் உழைப்பாளிகள் வர்க்கத்தினர் அதிகம் இருக்கிறார்கள். அதனால் இங்கு கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இதுவரை 16 பொதுத் தேர்தல்களைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி பலத்துடன் இதுவரை 7 முறை வென்றிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அடுத்ததாக 5 முறை அதிமுக-வும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் கோயில்பட்டியில் கொடிநாட்டி இருக்கின்றன. ஒரு தேர்தலில் சுயேச்சையையும் பேரவைக்கு அனுப்பி அதிசயம் நிகழ்த்தி இருக்கிறார்கள் கோவில்பட்டி மக்கள்.

    கோவில்​பட்டி தொகு​தி​யில் 1962, 1989, 2001, 2016 என நான்கு முறை போட்​டி​யிட்ட திமுக ஒரு​முறை​கூட வெற்​றிக் கனியை எட்​டிப் பறிக்​க​வில்​லை. கடைசி​யாக, 2016 தேர்​தலில் வெறும் 428 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இங்கு இரட்டை இலை​யிடம் தோற்​றும் போனது உதயசூரியன். அதனால் 2021-ல் தொகு​தியை சிபிஎம்​-மிற்கு தந்​து​விட்​டது திமுக. அதனால் தொடர்ந்து நான்​காவது முறை​யாக கோவில்​பட்​டியை தக்​க​வைத்​துக் கொண்​டது அதிமுக.

    இந்த நிலை​யில், இம்​முறை கோவில்​பட்​டி​யில் உதயசூரியனை உதிக்​கவைக்க வேண்​டும் என திமுக-​வினர் டீக்​கடை பிரச்​சா​ரம் செய்​து​கொண்​டிருக்​கி​றார்​கள். தொகு​திப் பக்​கம் வந்து போகும் அமைச்​சர்​களும் எம்​பி-​யான கனி​மொழி​யும், “இம்​முறை திமுக இங்கு போட்​டி​யிட்​டால் கட்​டா​யம் வெற்​றி​பெற வைக்க வேண்​டும்” என உடன்​பிறப்​பு​களுக்கு உரமேற்​றிக் கொண்டே வரு​கி​றார்​கள்.

    1978-ல் கருணாநிதி முதலமைச்​ச​ராக இருந்​த​போது தான் சீவலப்​பேரி கூட்​டுக்​குடிநீர் திட்​டத்​தைச் செயல்​படுத்தி கோவில்​பட்டி குடிநீர் பிரச்​சினைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தார். அதன்​பிறகு மீண்​டும் 2011-ல் கோவில்​பட்​டிக்​கான இரண்​டாவது குடிநீர் திட்​டத்​தை​யும் திமுக தான் அறி​வித்​தது. ஆனால் இந்​தத் திட்​டத்​தை, அடுத்து வந்த அதி​முக ஆட்​சி​தான் செயல்​படுத்​தி​யது. இது​மாத்​திரமல்​லாது, 10 ஆண்டு கால அதி​முக ஆட்​சி​யில், செயற்கை புல்​வெளி ஹாக்கி மைதானம், அரசு கலைக்​கல்​லூரி உள்​ளிட்​ட​வை​யும் கோவில்​பட்​டிக்கு கிடைத்​தன.

    செவிலியர் கல்​லூரி, கால்​நடை பல்​கலைக்​கழ​கத்​தின் பயிற்சி மற்​றும் ஆராய்ச்சி நிலை​யம் உள்​ளிட்ட திட்​டங்​களை​யும் அதி​முக ஆட்​சி​யில் அறி​வித்​தா​லும் அது இன்​னும் செயல்​வடிவம் பெறாமலேயே நிற்​கிறது. இதே​போல், கோவில்​பட்​டியை தலை​மை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்​டம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​யும் கவனிப்​பாரற்​றுக் கிடக்​கிறது. இந்​தத் திட்​டங்​கள் எல்​லாம் அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் மட்​டுமே செயல்​வடிவம் பெறும் என அதி​முக-​வினர் பேசிவ​ரும் நிலை​யில் தான், இம்​முறை கோவில்​பட்​டி​யில் உதயசூரியன் உதிக்க வேண்​டும் என திமுக-​வினர் உரக்​கப் பேச ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

    இதுகுறித்து கோவில்​பட்டி வடக்கு மாவட்ட திமுக துணைச் செய​லா​ள​ரான தா.ஏஞ்​சலா சின்​னத்​துரை நம்​மிடம் பேசுகை​யில், “பெண்​களுக்​கான மகளிர் உரிமைத் தொகை, தோழியர் விடு​தி, விடியல் பயணம் திட்​டங்​கள், மாண​வர்​களுக்​கான நான் முதல்​வன், தமிழ்​புதல்​வன், புது​மைப்​பெண் திட்​டங்​கள், மக்​களைத் தேடி மருத்​து​வம், காலை உணவுத்​திட்​டம், தாயு​மான​வன் திட்​டங்​கள் என ஏகப்​பட்ட திட்​டங்​களை தந்​திருக்​கி​றார் எங்​கள் முதல்​வர் ஸ்டா​லின். கோவில்​பட்டி 2-வது குடிநீர் திட்​டப்​பணி​களை அரைகுறை​யாக விட்​டுச் சென்​று​விட்​டது அதி​முக ஆட்​சி. எங்​கள் ஆட்​சி​யில் தான் அது முழு​மைபெற்​றது. கோவில்​பட்டி தொகுதி மீது எங்​கள் எம்​பி-​யான கனி​மொழி​யும் சிறப்​புக் கவனம் எடுத்து வரு​வ​தால் இம்​முறை கண்​டிப்​பாக இங்கே திமுக ஜெயிக்​கும் பாருங்க” என்​றார்.

    இதற்கு பதிலளித்த தூத்​துக்​குடி வடக்கு மாவட்ட அதி​முக வர்த்தக அணி செய​லா​ள​ரான வி.எஸ்​.டி.பி.​ரா​மர், “2011-ல் கோவில்​பட்டி 2-வது குடிநீர் திட்​டத்​துக்கு அடித்​தளம் போட்​டதே எங்​களது எம்​எல்​ஏ-​வான அண்​ணன் கடம்​பூர் ராஜு​தான். அவரது கோரிக்​கையை ஏற்று அம்மா அந்​தத் திட்​டத்​துக்கு ரூ.81.82 கோடி ஒதுக்​கி​னார். பணி​கள் முடிந்து அந்​தத் திட்​டத்தை எடப்​பாடி​யார் 2018-ல் மக்​களுக்கு அர்​பணித்​தார். அதி​முக ஆட்சி இருந்த வரைக்​கும் கோவில்​பட்​டி​யில் தின​மும் குடிநீர் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. ஆனால், இப்​போது வாரத்​துக்கு ஒரு​முறை தான் தண்​ணீர் வரு​கிறது.

    எங்​கள் ஆட்​சி​யில் தான் கயத்​தாறு தனி தாலு​கா, கோவில்​பட்​டிக்​கென தனி​யாக வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம், கழுகுமலை சுற்​றுலாத்​தல​மாக அறி​விப்​பு, நகராட்​சிக்கு ரூ.5 கோடி​யில் புதிய கட்​டிடம் என அத்​தனை​யும் வந்​தது. இன்​னும் மக்​களுக்​குத் தேவை​யான எண்​ணற்ற திட்​டங்​களை அவர்​கள் கேட்​காமலேயே செயல்​படுத்​தி​ய​தால் தான் அதி​முக இந்​தத் தொகு​தி​யில் தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று வரு​கிறது. அந்த வெற்​றி​யானது இந்​தத் தேர்​தலிலும் தொடரும். ஏனென்​றால், இது அதி​முக கோட்​டை. தலைகீழாக நின்று தண்​ணீர் குடித்​தா​லும் திமுக இங்கு வெற்​றி​பெறவே முடி​யாது” என்​றார்.

    உழைக்​கும் தோழர்​கள் நிறைந்​திருந்​தும் கடந்த முறை சிபிஎம் கட்​சிக்கு மூன்​றாமிடத்​தைக் கொடுத்த கோவில்​பட்டி வாக்​காளர்​கள், இம்​முறை உதயசூரியன் போட்​டி​யிட்​டால் அதற்கு எத்​தனை மார்க் போடு​கி​றார்​கள் என்று பொறுத்​திருந்து பார்​க்​கலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 21, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
    • இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு
    • தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து
    • விண்மீனின் மறைக்கப்பட்ட அதிசயங்களை வெளிப்படுத்தும் 8 தாடை-கைவிடுதல் பால்வீதி படங்களை நாசா பகிர்ந்து கொள்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.