Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? – பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்
    மாநிலம்

    கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? – பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்

    adminBy adminJuly 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? – பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘கோ​யில் நிலத்தை ஆக்​கிரமித்து குடி​யிருந்து வருபவர்​களுக்​கு, அங்​கேயே வீடு கட்டி கொடுப்​போம் என சொல்​வ​தா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்​னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

    இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்​டம் ஒரத்​த​நாட்​டில் சுற்​றுப்​பயணம் செய்த முன்​னாள் முதல்​வர் பழனிசாமி, கோயில் நிலத்​தில் குடி​யிருப்​போருக்கு கோயில் நிலம் சொந்​த​மாக்​கப்​படும் என்​றும், தங்​களு​டைய அரசு அமைந்​தால் அரசு சார்​பில் வீடு கட்டித்தரப்படும் என்​றும் சொல்​லி​யிருப்​பது உண்​மை​யிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது.

    தமிழக அரசின் இந்து சமய அறநிலை​யத்​துறைக்கு உட்​பட்ட 40,000-க்​கும் மேற்​பட்ட கோயில்​களுக்​குச் சொந்​த​மாக பல லட்​சம் ஏக்கர் நிலங்​கள் உள்​ளன. இந்த நிலங்​களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திரா​விட அரசாங்​கங்​கள் கொடுத்தது அல்ல.

    அந்​தக்​ காலத்​தில் அரசர்​களும், ஆன்​மீகப் பெரியோர்​களும் கோயில்​களுக்கு ஆறு கால பூஜை நடக்​க​வும், கோயில்​களின் அன்றாட செல​வு​களுக்​காக​வும் அந்​தக் கோயில் நிலங்​களில் இருந்து வரு​கின்ற வரு​மானத்​தின்மூல​மாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்​களை எழுதி வைத்​தனர்.

    தற்​போது பல்​லா​யிரக்​கணக்​கான ஏக்​கர் நிலங்​கள் ஆக்​கிரமிப்​பாளர் பிடி​யில் உள்​ளது. நீதி​மன்​றங்​கள் பலமுறை தலை​யிட்டு இதைப் பற்றி பேசி​யும் எந்த ஒரு அரசாங்​க​மும் கோயில் நிலங்​களை மீட்க சரி​யான நடவடிக்கை இது​வரை எடுக்​க​வில்​லை. இந்நிலையியில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தான் ஆட்​சிக்கு வந்தபிறகு கோயில் நிலங்​களில் குடி​யிருப்​போருக்கு கோயில் நிலத்தை சொந்​த​மாக்கி அதில் வீடும் கட்​டித் தரப்​படும் என்று சொல்​வது வெந்த புண்​ணில் வேலைப் பாய்ச்​சுவது போல் உள்​ளது.

    ஏற்​கெனவே சிறு​பான்​மை​யினரை தாஜா செய்​யும் நோக்​கத்​தில் வக்பு வாரியச் சட்​டத்தை தீவிர​மாக எதிர்த்​தவர் பழனிசாமி. தற்போது தமிழகத்​தில் பல கோயில்​களும் கோயில் நிலங்​களும் வக்பு போர்​டுக்​குச் சொந்​த​மானது என சொல்லி ஆக்​கிரமிக்க முயலும் சிறு​பான்​மை​யினருக்கு இது ஆதர​வாக அமை​யா​தா? கோயில் நிலத்தை ஆக்​கிரமிப்பு செய்​தவர்​களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்​டித் தரப்​படும் என்று சொல்​லும் பழனி​சாமி, வக்பு நிலங்​களி​லும், கிறிஸ்​தவ நிறுவனங்களுக்​குச் சொந்​த​மான லட்​சக்​கணக்​கான நிலங்​களி​லும் ஏழை, எளிய மக்​களுக்கு வீடு கட்​டிக் கொடுப்​போம் என்று சொல்ல முடி​யு​மா? ஆகவே பழனிசாமி சொல்​லி​யிருப்​பதை இந்து முன்​னணி வன்​மை​யாக கண்​டிக்​கிறது. உடனடி​யாக அவரது கருத்தை திரும்​பப்​ பெற வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

    September 8, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா

    September 8, 2025
    மாநிலம்

    அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலம் உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு

    September 8, 2025
    மாநிலம்

    முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க முடியாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்

    September 8, 2025
    மாநிலம்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    September 8, 2025
    மாநிலம்

    ஏழை மக்களை ஏமாற்றித்தான் ஆட்சியை பிடிக்க வேண்டுமா? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொழுப்பு கல்லீரல் நோயின் 3 கட்டுக்கதைகள், ஐம்ஸ் மற்றும் ஹார்வர்ட் டாக்டர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியோரால் முறியடித்தபடி, நம்புவதை நிறுத்த வேண்டும்
    • பிசிசிஐ வருவாய் ரூ.14,627 கோடியாக அதிகரிப்பு
    • செப்.12-ல் 10 படங்கள் ரிலீஸ்
    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
    • தென் ஆப்பிரிக்க அணி வீரர் சுப்ராயன் பந்துவீச ஐசிசி அனுமதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.