Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது.

    ஆனால், இதை மீறி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களின் நிதியைக் கொண்டு, திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாகக் கட்டிடங்களை அறநிலையத் துறை கட்டி வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் முன் பக்தர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கோயிலின் அறங்காவலர்கள் குழுக் கூட்டத்தைக் கூட்டி, ஆட்சேபனையும் இல்லையென்ற பிறகே கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும்.

    ஆனால், தமிழக அரசும், அறநிலையத் துறை அதிகாரிகளும் விதிமுறைகளுக்குப் புறம்பாக, தமிழகம் முழுவதும் தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கோயில்களில் கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சுசீந்திரம் குமாரசாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, பவானி சங்கமேஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி, காட்டுமன்னார் கோவில் பேசும்பெருமாள், ஈரோடு பண்ணாரி மாரியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், எழும்பூர் சீனிவாசப்பெருமாள், பாடி திருவல்லீஸ்வரர், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார், வீரபாண்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டு, பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    எனவே, கோயில் நிதியில் இருந்து எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதி்க்க வேண்டும். மேலும், இது தொடர்பான டெண்டர் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.ஜெகந்நாத், நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டனர். அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் கே. கார்த்திக் ஜெகந்நாத் ஆகியோர் வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கோயில் நிதியைக்கொண்டு வணிக வளாகம், திருமண மண்டபம் போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என ஏற்கெனவே பி.பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். மேலும், அதுவரை எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா
    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.