Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
    மாநிலம்

    கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்​குமாரை போலீ​ஸார் தாக்​கியதை வீடியோ எடுத்​தவருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

    சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் காவலா​ளி​யாகப் பணிபுரிந்த அஜித்​கு​மார் (29), நகை திருட்டு புகாரின்​பேரில் தனிப்​படை போலீ​ஸாரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது உயி​ரிழந்​தார். கோயில் பின்​புற​முள்ள மாட்​டுத் தொழு​வத்​தில் அஜித்​கு​மாரை, தனிப்​படை போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கு​வதை கோயில் பணி​யாளர் சக்​தீஸ்​வரன், கழி​வறை​யில் மறைந்​திருந்து வீடியோ எடுத்​தார். இதனால் அவர் இவ்​வழக்​கில் நேரடி சாட்​சி​யாக உள்​ளார்.

    இந்​நிலை​யில், தனக்கு ஆயுதமேந்​திய போலீஸ் பாது​காப்பு கேட்டு இ-மெயி​லில் டிஜிபிக்கு சக்​தீஸ்​வரன் கடிதம் அனுப்​பி​னார். இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நான்​தான் அஜித்​கு​மாரை பிடித்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​த​தாக, கைதாகி​யுள்ள தலை​மைக் காவலர் ராஜாவுடன் தொடர்​பில் உள்​ளவர்​கள் தவறான தகவலைப் பரப்​பு​கின்​றனர். நான் துணிந்​து​தான் சாட்சி சொல்ல முடி​வெடுத்​தேன். எனக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால், மற்​றவர்​கள் சாட்சி சொல்ல பயப்​படு​கின்​றனர். எனது உயிர் போனால்​கூட பரவா​யில்​லை. மற்ற சாட்​சிகளைப் பாது​காக்க வேண்​டும். குற்​றம் செய்​தவர்​கள் மீது​ நடவடிக்கை எடுக்​கு​மாறு மட்​டுமே நான் சொன்​னேன். அரசையோ, மற்​றவர்​களையோ குறை கூற​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

    அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போலீ​ஸார் தாக்கி அஜித்​கு​மார் இறந்த வழக்​கில், ஜூன் 1-ம் தேதி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் சாட்சி அளித்​துள்​ளேன். அஜித்​கு​மார் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்ட தலை​மைக் காவலர் ராஜா என்​பவர், பல்​வேறு குற்​றப் பின்​னணி உடைய ரவுடிகளு​டன் தொடர்​பில் இருந்​துள்​ளார். ஜூன் 28-ம் தேதி காலை​யில் தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது நான் காவலர் ராஜாவை நேரில் சந்​தித்​தேன். அப்​போதே என்னை கடுமை​யாக மிரட்​டி​னார். எனக்​கும், என்​னைச் சார்ந்​தோருக்​கும் அச்​சுறுத்​தல் உள்​ளது.

    எனவே, எனக்​கும், மற்​றவர்​களுக்​கும் ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும். அது​வும் பிற மாவட்​டத்​தைச் சேர்ந்த போலீ​ஸாரை நியமிக்க வேண்​டும். இவ்​வாறு அந்த கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது. மேலும் இந்த கடித நகலை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு பதி​வாள​ருக்​கும், தென் மண்டல ஐ.ஜி.க்​கும் அனுப்​பி​யுள்​ளார்.

    இதையடுத்​து, தென்​மண்டல ஐ.ஜி. பிரேம்​ஆனந்த் சின்ஹா உத்​தர​வின் பேரில், சக்​தீஸ்​கு​மாருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. மேலும், அவரது வீடு, அலு​வல​கத்​தி​லும் தலா 2 காவலர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட உள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

    July 4, 2025
    மாநிலம்

    பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்: அன்புமணி

    July 4, 2025
    மாநிலம்

    “அன்புமணிக்கு தொண்டனாகவும் செயல்படுவேன்” – பாமக எம்எல்ஏ அருள் திடீர் உருக்கம்

    July 4, 2025
    மாநிலம்

    அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

    July 4, 2025
    மாநிலம்

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்

    July 4, 2025
    மாநிலம்

    சிபிசிஐடி விசாரணைதான் வேண்டும்: அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
    • மழைநீர் குடிப்பது பாதுகாப்பானதா? விஞ்ஞானிகள் பதிலை வெளிப்படுத்துகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆங்கிலத்தில் வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் – ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ன ஆனது?
    • கேரளாவில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானம்: தனித்தனியாக பிரித்து கொண்டு செல்ல திட்டம்
    • புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.