Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விதிகளைப் பின்பற்றியே கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் அறநிலைய துறை பதில் 
    மாநிலம்

    கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விதிகளைப் பின்பற்றியே கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் அறநிலைய துறை பதில் 

    adminBy adminJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விதிகளைப் பின்பற்றியே கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் அறநிலைய துறை பதில் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கோ​யில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி சட்​ட​வி​தி​களைப் பின்​பற்​றியே கோயில் நிலத்​தில், கோயில் நிதி​யைப் பயன்​படுத்தி கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அறநிலை​யத்​துறை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

    தமிழகத்​தில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மான நிலங்​களில் கோயில் நிதி​யில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரி​வித்து மயி​லாப்​பூரைச் சேர்ந்த ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான டி.ஆர்​. ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கட்​டு​மானப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளக்​கூ​டாது எனக் கூறி தற்​போதைய நிலையே நீடிக்க உத்​தர​விட்​டது.

    இந்​நிலை​யில் அறநிலை​யத்​துறை தரப்​பில் அரசு வழக்கறிஞர் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன் தாக்​கல் செய்த​ பதில் மனு: அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மாக பல லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் உள்​ளன. இதில் 23 ஆயிரம் கடைகளும், 76,500 கோயில் சார்ந்த கட்​டு​மானங்​களும் உள்​ளன. இவற்​றின் மூலம் கடந்த 2024 ஏப்​ரல் முதல் 2025 மார்ச் வரையி​லான ஓராண்டு காலத்​தில் குத்​தகை வரு​மான​மாக ரூ.345 கோடி கிடைத்​துள்​ளது.

    ஆனால் போது​மான பாசன வசதி கிடைக்​காமலும், நகர்​மய​மாதல் காரண​மாக​வும் பெரும்​பாலான கோயில் நிலங்​களில் இருந்து எந்த வரு​மான​மும் கிடைக்​க​வில்​லை. அந்த நிலங்​களைத் தேர்வு செய்து அங்கு திருமண மண்​டபங்​கள், உணவுக்​கூடங்​கள், அரங்​கங்​கள், கடைகள் கட்​டு​வதன் மூலம் கோயிலுக்கு வரு​வாய் கிடைக்​கும் என்​ப​தா​லும், ஆக்​கிரமிப்​பு​களில் இருந்து அவற்றை பாது​காக்க முடி​யும் என்​ப​தா​லும், கட்​டு​மானங்​கள் மேற்​கொள்ள டெண்​டர் விடப்​பட்டு கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன.

    இந்த கட்​டு​மானங்​கள் கோயில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின் அடிப்​படை​யில், உரிய அனு​ம​தி​களைப் பெற்​று, அறநிலை​யத்​துறை சட்​ட​வி​தி​களுக்கு உட்​பட்டே மேற்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு கூறப்​பட்டு இருந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம். ஸ்ரீவஸ்​தவா, நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, சட்​ட​வி​தியை மீறி கோயில் நிதி பயன்​படுத்​தப்​பட்​டது குறித்து விளக்க மனு தாக்​கல் செய்​ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டிஜிபி அலுவலகம் விளக்கம்

    July 28, 2025
    மாநிலம்

    இபிஎஸ் ‘குட்டி மீட்’, மேடையில் திருமா… மோடி விசிட் ‘அரசியல்’ தருணங்கள்!

    July 28, 2025
    மாநிலம்

    தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

    July 28, 2025
    மாநிலம்

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

    July 28, 2025
    மாநிலம்

    காஞ்சியில் நடைபயணம்: நெசவாளரிடம் குறைகளை கேட்டறிந்த அன்புமணி

    July 28, 2025
    மாநிலம்

    230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும்: மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தல்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்  
    • அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டிஜிபி அலுவலகம் விளக்கம்
    • அதிகப்படியான பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துமா? இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி காவலாளி கைது
    • ராஷ்மிகா மந்தனா படத்துக்கு ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.