Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோயிலில் அனுமதி மறுப்பு விவகாரம்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை
    மாநிலம்

    கோயிலில் அனுமதி மறுப்பு விவகாரம்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோயிலில் அனுமதி மறுப்பு விவகாரம்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கோயி​லுக்​குள் பட்​டியலின மக்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்ட விவ​காரத்​தில், சரி​யாக நடவடிக்கை எடுக்​காத கரூர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அரசுக்கு, உயர் நீதி​மன்றம் பரிந்​துரை செய்துள்​ளது.

    கரூர் மாவட்டம் சின்​ன​தா​ராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்​னியகுல சத்​திரியர் நல அறக்​கட்​டளை தலை​வர் முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். அதேபோல, அக்​கோயி​லில் பட்டியலின மக்​களைஅனு​ம​திக்​கக் கோரி​யும், கோயிலை மூடு​வது தொடர்​பான கோட்​டாட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும் மாரி​முத்து என்​பவர் மனு தாக்​கல் செய்​தார்.

    இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிபதி பி.பு​கழேந்தி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: சின்ன தாராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் பட்​டியல் சாதி​யினர் விலக்கி வைக்​கப்பட்​டுள்ள காட்சியை காண நேர்ந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளர் எதற்​காக இருக்​கிறார்​கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்​சி​யர், காவல் கண்​காணிப்​பாளர் பதவி​ அலங்​காரப் பதவி​ அல்ல, அரசி​யலமைப்பு பதவி.​

    அரசி​யலமைப்புவழங்​கி​யுள்ள அதி​காரம், சலுகைகளை அனுபவிக்​கும் ஆட்​சி​யரும், காவல் கண்​காணிப்​பாள​ரும், அடிப்​படை உரிமை​களை நிறை வேற்ற மறுக்​கின்​றனர். மாவட்ட ஆட்​சியர் உடனடி​யாகஇரு சமூகங்​களுக்​கிடையே அமை​திக்கூட்​டம் நடத்​தி, அறநிலை​யத் துறை அதி​காரிகளின் துணை​யுடன்அனைத்து சாதி​யினரும் பங்​கேற்​கும் கூட்டு வழி​பாடுநடத்த ஏற்​பாடு செய்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் 7 ஆண்​டு​களாக சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும் என்று கூறி கோயிலை பூட்டி வைத்​திருப்​பது சரியல்ல.

    கோயில்​கள் அனைத்து பக்​தர்​களுக்​கும் திறந்​திருப்​பதை உறுதி செய்​யும் கடமை காவல் கண்காணிப்​பாள​ருக்கு உண்​டு. பட்​டியலின மக்​கள் கோயிலில் வழிபடு​வதை தடுப்​பவர்​கள் மீது வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுத்​திருக்க வேண்​டும். சட்​டம் ஒழுங்கை பாது​காத்​திருக்க வேண்​டும். இவற்றை செய்​வதற்கு பதிலாக கோயிலை மூடி​யுள்​ளனர்.

    ஆட்​சி​யரும், காவல் கண்​காணிப்​பாளரும் சட்​டப்​படி செயல்​பட்​டிருந்​தால் 2018 முதல் கோயில் மூடப்​பட்​டிருக்​காது. பக்​தர்​களும் உரிமைக்​காக நீதி​மன்​றத்தை நாடி​யிருக்க மாட்​டார்​கள். இரு​வரும் அரசி​யலமைப்பு கடமையி​லிருந்து வில​கிச் சென்​றுள்​ளனர். இந்த நடத்​தையின் மூலம் இரு​வரும் கடமையை செய்ய தகுதி​யற்​றவர்​கள் என்று ஒப்​புக்​கொண்​டுள்​ளனர்.

    இரு​வரின் செயல்​பாடு​கள் கண்​டிக்​கத்​தக்​கது. அரசு இரு​வரை​யும் இடமாறு​தல் செய்​வது உள்​ளிட்ட நடவடிக்கை எடுக்​கும் என்று நீதி​மன்​றம் எதிர்​பார்க்​கிறது. அப் போது​தான் சாதி​யின் பெய​ரால் கோயிலுக்​குள் நுழைவதை தடுக்க துணிபவர்​களுக்கு பயத்தை ஏற்​படுத்​தும். இவ்​வாறு நீதிபதி உத்​தரவில் கூறியுள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?

    September 19, 2025
    மாநிலம்

    நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

    September 19, 2025
    மாநிலம்

    “தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    September 18, 2025
    மாநிலம்

    ‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85% நிறைவு: இஸ்ரோ தலைவர் தகவல்

    September 18, 2025
    மாநிலம்

    திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    “தோல்வி பயத்தில் பழனிசாமியை பற்றியே முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பித்தப்பை என்ன: அவை பித்தப்பை புற்றுநோயின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “எப்போதும் சிரிப்பை பரிமாறிய மனிதர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
    • ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?
    • கொக்கோ அல்லது கோகோ: சமையல் மற்றும் பேக்கிங்கிற்கு சிறந்த சாக்லேட் பவுடரை எவ்வாறு தேர்வு செய்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஜியோஸ்டாருக்கே உரிமை” – ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப நீதிமன்றம் தடை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.