Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறு அன்பில் கிராமம் வழியே செல்கிறது. இந்த ஆற்று நீரே குடிநீராகவும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக குழாய்கள் வழியாக குடிதண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று நீர் பற்றாக்குறைக்கு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை கட்டக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதே நேரத்தில் புதிய குடிநீர் திட்டங்களின் பெயரில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி ஆனந்தமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் நீரேற்று குழாய்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருச்சி லால்குடி ஆனந்தமேடு கிராம கொள்ளிடம் ஆற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்கள், நீரேற்று பைப்புகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலக பயன்பாட்டுக்கும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அது அரசின் கொள்கை முடிவு. அதில் எப்படி தலையிட இயலும்?” என கேள்வி எழுப்பினர்.

    அரசுத் தரப்பில், “குடிநீர் தேவைக்காக மட்டுமே கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலக பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து உரிமைத் தொகை வழங்கப்படும்” – இபிஎஸ்

    July 15, 2025
    மாநிலம்

    அந்தரங்க வீடியோ விவகாரம்: பெண் வழக்கறிஞரை போலீஸார் விசாரித்த விதத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

    July 15, 2025
    மாநிலம்

    “டெல்லி காவி அணியின் கனவுத் திட்டம் பலிக்காது!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    July 15, 2025
    மாநிலம்

    காமராஜர் பிறந்தநாளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தேன்: முதல்வர் ஸ்டாலின்

    July 15, 2025
    மாநிலம்

    தமிழக அரசு வஞ்சிக்கலாமா? – ‘சிபில்’ விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம்

    July 15, 2025
    மாநிலம்

    “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவில் டெஸ்லாவின் ‘ஒய்’ மாடல் கார்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் எப்படி?
    • உங்கள் சருமத்தை மேம்படுத்துவதற்கான சிவப்பு ராஸ்பெர்ரி: பயன்படுத்த வேண்டிய நன்மைகள் மற்றும் உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒடிசா மாணவி உயிரிழந்த விவகாரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்த யுஜிசி
    • சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்புக்கான சேர்க்கை – ஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்
    • “அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து உரிமைத் தொகை வழங்கப்படும்” – இபிஎஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.