Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    மாநிலம்

    “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரியலூர்: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

    ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, அரியலூர் மாவட்டம விவசாய சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது, ‘கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெல், கரும்பு, முந்திரிக்கு உரிய விலை நிர்ணயித்து விவசாயத்தை காக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

    பின்னர் விவசாயிகளின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த பெருமை அதிமுகவைச் சேரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரு முறையும், எனது ஆட்சி காலத்தில் ஒரு முறையும் என இரு முறை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

    குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் சுமார் 14,000 ஏரிகள் தூர்வாரப்பட்டன. இதனால் மழைநீர் முழுவதும் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்றனர். இந்த ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் விவசாய நிலங்கள் ஊட்டச்சத்து பெற்று விவசாயம் பன்மடங்கு பெருகியது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    சேலத்தில் எனது ஆட்சி காலத்தில் சுமார் 1,000 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கால்நடை பண்ணையை திமுக அரசு மூடிவிட்டது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உங்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த கால்நடை பண்ணை மீண்டும் செயல்படுத்தப்பட்டு இங்கு உருவாக்கப்படும் சிறந்த கலப்பின பசுக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் வளர்ச்சி அடைவார்கள்.

    திமுக அரசு எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்கள். அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 தரவில்லை. பலமுறை சட்டப்பேரவையில் நான் கோரிக்கை வைத்தும், திமுக அரசு வழங்கவில்லை. உங்களின் ஆதரவுடன் அதிமுக அரசு அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து விவசாயிகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் வழங்கிய தானியத்திலான பூங்கொத்துகளையும், விவசாயிகளை அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், இளம்பை தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பர்கினை மறந்துவிடு, ஐஸ்வர்யா ராய் பச்சனின் கைப்பையின் பாணி பழைய பள்ளி நேர்த்தியானது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மார்லன் பிராண்டோவின் அன்றைய மேற்கோள்: “அமெரிக்காவில் உள்ள நோயின் ஒரு பகுதி இது, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்… அதாவது, என்ன பயன்? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மில்லியன் கணக்கானவர்கள் தினசரி நீல ஒளி கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவை உண்மையில் கண் பாதிப்பைத் தடுக்கின்றனவா? கண் மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சில குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்குள் நீரிழிவு நோயை ஏன் உருவாக்குகின்றன: புதிதாக அடையாளம் காணப்பட்ட மரபணு, பிறந்த குழந்தை நோய்க்கான மறைக்கப்பட்ட காரணத்தை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புயலுக்குப் பிறகு: டேட்-இணைக்கப்பட்ட சர்ச்சை மற்றும் மனோஸ்பியர் ஆய்வுக்குப் பிறகு மார்-ஏ-லாகோ வாரங்களில் பரோன் டிரம்ப் காணப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.