Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமீன்: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமீன்: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமீன்: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லக்‌ஷ்மி பாலா என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லக்‌ஷ்மி பாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து ஜூலை 3ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதாகவும், ஆனால் புகார்தாரர் ஜூலை 9-ம் தேதி தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கூறினார்.

    இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர், விசாரணை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தாக்கப்பட்டவர் ஜூலை 3 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனதாக, அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

    இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து, ஜூலை 28-ம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்

    September 11, 2025
    மாநிலம்

    தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்

    September 11, 2025
    மாநிலம்

    மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்

    September 11, 2025
    மாநிலம்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்

    September 11, 2025
    மாநிலம்

    “திமுக விளம்பர நாடகத்துக்கு அரசுப் பள்ளிகளும் பலிகடா…” – அண்ணாமலை சாடல்

    September 10, 2025
    மாநிலம்

    திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்
    • தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்
    • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்
    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.