Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    மாநிலம்

    கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேல்மலைப் பகுதியான கொடைக்கானல் – பூம்பாறை இடையே 21 கி.மீ., சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த இருதினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மருத்துவமனை, ஆரம்பர சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்எல்ஏ., க்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மேல்மலைப்பகுதி மலைகிராமமான பூம்பாறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள சென்றவர் திடீரென காரில் இருந்து இறங்கி ஏற்றம் இறக்கம் மிகுந்த மலைச்சாலையில் நடக்க துவங்கினார். பூம்பாறை மலைகிராமம் வரை 21 கி.மீ., நடந்தே சென்றார்.

    பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை மருந்துகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். பதிவேட்டில் இருந்த சிகிச்சை பெற்று திரும்பிய நோயாளிகளின் அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முறையாக சிகிச்சயளிக்கப்பட்டதா என கேட்டறிந்தார். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் செயல்பாட்டை பாராட்டும் வகையில் டீ வாங்கி வரச்சொல்லி அவர்களுக்கு தானே வழங்கினார்.

    கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

    தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் இருதய நோய்க்கு உடனடியாக சீர் செய்வதற்கு லோடிங் டோசஸ் என்று சொல்லக்கூடிய மருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்களிலும், 2,286 சுகாதார நிலையங்களிலும் 3 மருந்துகள் அடங்கிய 16 மாத்திரைகள் தொகுப்பு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பூம்பாறை கிராமத்தில் 23 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற சுகாதார நிலையத்திலும் 2286 கட்டமைப்புகளில் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    June 30, 2025
    மாநிலம்

    புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு: புதுச்சேரி பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவு

    June 30, 2025
    மாநிலம்

    திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

    June 30, 2025
    மாநிலம்

    44-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் 58,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

    June 29, 2025
    மாநிலம்

    வீரப்பனுக்கு மணிமண்டபம்: அமைச்சரிடம் முத்துலட்சுமி கோரிக்கை

    June 29, 2025
    மாநிலம்

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்
    • ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!
    • காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்
    • சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு
    • மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.