Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்
    மாநிலம்

    கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28-க்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர்.

    தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார். அதேபோல, கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளதாக கூறி, அதனை தாக்கல் செய்தார்.

    அப்போது அவர், “அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக் கம்பங்கள் அமைக்கும்போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக் கம்பங்கள் அமைக்க கூடாது; மூன்று நாட்களுக்கு மேல் கொடிக் கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, இந்த விதிமுறைகளையும், அரசாணையையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும், இவை ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மேலும், இந்த வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தாமல் மீறி செயல்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்

    September 17, 2025
    மாநிலம்

    ‘பொதுமக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் திறக்கக் கூடாது’ – உங்கள் குரலில் வாசகர் புகார்

    September 17, 2025
    மாநிலம்

    மேடவாக்கம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.58 கோடியில் கால்வாய் பணி இறுதி கட்டத்தை அடைந்தது!

    September 17, 2025
    மாநிலம்

    நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

    September 17, 2025
    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

    September 17, 2025
    மாநிலம்

    ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மாதம்பட்டி ரங்கராஜ்!

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்
    • ஆரோக்கியமான செரிமானத்திற்கான 10 ஃபைபர் நிறைந்த காலை உணவுகள், AIIMS இரைப்பை குடல் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பொதுமக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் திறக்கக் கூடாது’ – உங்கள் குரலில் வாசகர் புகார்
    • வாயு மற்றும் வீக்கத்தை நீக்குவதற்கான இயற்கை வழிகள்: 5 எளிய தீர்வுகள் நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் என்கவுன்ட்டர்: பெண் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொலை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.