Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை ஐகோர்ட் மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வலியுறுத்தல்
    மாநிலம்

    கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை ஐகோர்ட் மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வலியுறுத்தல்

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை ஐகோர்ட் மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக் கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் போடுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி 28ம் தேதி வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. அவைகள் விசாரணையில் இருந்து வருகின்றன.

    இந்த நிலையில், நேற்று (ஜூன் 18) சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 2ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும். இல்லையெனில் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளில் நடப்படும் கொடிகளுக்கு தலா ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு கட்டணம் வசூலித்தால் கொடிக் கம்பங்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றெல்லாம் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக்கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட விபரம் குறித்து அரசு தரப்பில் உண்மையை பிரதிபலிக்கவில்லை என்று யாராவது ஒரு மனுப் போட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் அரசியல் கட்சிகளை அமில வார்த்தைகளில் விமர்சிக்குமா?

    நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதுவதா? இப்படியான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீதிமன்றங்கள் பார்வைக்கு தெரிவித்து, அரசியல் கட்சிகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட அனுமதிக்கும் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை மறு பரிசீலனை செய்து, திருத்த வேண்டும். இது தொடர்பாக வலுவான ஆதாரங்களுடன், வழிவழியாக பின்பற்றப்படும் உரிமைகளை பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    September 12, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    September 12, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

    September 12, 2025
    மாநிலம்

    “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

    September 12, 2025
    மாநிலம்

    சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தலையணைகளில் மஞ்சள் கறைகள் உங்கள் உடல்நலம் மற்றும் தூக்கம் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
    • ஹோண்டுரான் மீன் மழை: இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான ‘மீன் மழையை’ காண்கிறது; அறிவியல் அல்லது புராணக்கதை? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!
    • ‘ஜனநாயகன்’ vs ’பராசக்தி’ – பொங்கல் ரேஸ் உறுதியானது!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.