Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை
    மாநிலம்

    கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை

    adminBy adminJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் உதித்ராஜ் பேசினார்.

    நிறைவாக செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது. தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்கள், அம்பானி, அதானிக்கு ஆதரவாக 4 ஆக குறைக்கப்பட்டன. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, அடிப்படை ஊதிய உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் ஆட்சியில் நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்கவில்லை. அதற்காக தமிழகத்துக்கான நிதியை நிறுத்தவில்லை. ஆனால் பாஜக, புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை எனக்கூறி கல்வி நிதியை நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இண்டியா கூட்டணிக்கு பிரேமலதா வந்தால் வரவேற்பேன். தமிழகத்தை பொருத்தவரை, இண்டியா கூட்டணியின் தலைவரான ஸ்டாலின்தான் யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுப்பார். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் இடம் கோரலாம். காங்கிரஸை பொருத்தவரை, அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்க வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதற்காக மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டுவருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகர், எம்.பி. விஷ்ணு பிரசாத், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில தலைவர் வி.மகேஸ்வரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்தழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

    July 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 29, 2025
    மாநிலம்

    செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

    July 29, 2025
    மாநிலம்

    கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    July 29, 2025
    மாநிலம்

    நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

    July 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் என்ன? – பட்டியலிட அண்ணாமலை வலியுறுத்தல்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
    • விவசாயிகளின் சிக்கல்களை பேசும் ‘உழவர் மகன்’
    • பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்
    • ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய சிவப்பு உதட்டுச்சாயத்தின் 5 சின்னமான நிழல்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • செவ்வாய் கிரகங்கள் மற்றும் ஆழமான விண்வெளி பயணங்களில் ஆரோக்கியமான விண்வெளி வீரர் வாழ்க்கைக்கு விண்வெளியில் வளரும் தாவரங்கள் முக்கியம் என்பதை நாசா நிரூபிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.