Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கூட்டணி ஆட்சி தொடர்பான அமித் ஷா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது: ராம சீனிவாசன் கருத்து
    மாநிலம்

    கூட்டணி ஆட்சி தொடர்பான அமித் ஷா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது: ராம சீனிவாசன் கருத்து

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கூட்டணி ஆட்சி தொடர்பான அமித் ஷா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது: ராம சீனிவாசன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடன நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சென்னையில் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது செய்யப்பட்டது அபாயகரமானது. காவல் துறை உயரதிகாரிகள் கைது செய்யப்படுவதை தீவிரமாக கருத வேண்டும். காவல் துறை உயர் அதிகாரியே கடத்தலுக்கு துணை போவதை ஏற்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தின் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டுள்ளது. எனவே, அந்த ஆலையை மீண்டும் திறக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், சீனாவில் இருந்து தாமிரத்தை அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். தமிழகத்தில் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    கீழடி நாகரிக வரலாற்றை மத்திய அரசு மறைக்கப் பார்க்கிறது என தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். கீழடி நாகரிகம் குறித்து இன்னும் அறிவியல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளதால், ஆய்வுக்குப் பிறகு கீழடி நாகரிகம் குறித்து தகவல் வெளியிடப்படும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் அவர் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்றுதான் சொல்வோமே தவிர, பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சி என்று சொல்லப் போவதில்லை.

    இந்தியா முழுவதுமே தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம். அதையேதான் அமித்ஷாவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 2026-ல் அதிமுக பெரும்பான்மையுன் ஆட்சி அமைத்தாலும், அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்வோம். அமித்ஷா எந்த இடத்திலும் கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் கூறியுள்ளார். இவ்வாறு ராம சீனிவாசன் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

    September 14, 2025
    மாநிலம்

    தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

    September 14, 2025
    மாநிலம்

    பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    September 14, 2025
    மாநிலம்

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்

    September 14, 2025
    மாநிலம்

    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
    • உடைந்த இதய நோய்க்குறி என்றால் என்ன, அதிலிருந்து யாராவது உண்மையில் இறக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி
    • தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
    • பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.