Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்
    மாநிலம்

    குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் கவனக் குறைவால் ஒரு உயிர் போனது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவருக்கு வலது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவாகச் செயல்படுவதால் உயிரிழப்புகளும், உறுப்பு இழப்புகளும் நடக்கின்ற ஒரு அவலம் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கின்றது.

    எனவே மருத்துவத்துறை அமைச்சரும் தமிழக அரசும் இதில் கவனம் செலுத்தி மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். தவறான சிகிச்சையால் நடக்கும் அவலங்கள் நடக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மூட்டு அறுவை சிகிச்சை செய்த நபருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து உரிய நிவாரணம் வழங்கி அவர் வெகு விரைவில் நடப்பதற்கு இந்த அரசு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    அந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொய்கிறோம்.’ இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    மாநிலம்

    பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

    September 12, 2025
    மாநிலம்

    திமுக முப்பெரும் விழா தேர்தல் திருப்புமுனையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

    September 12, 2025
    மாநிலம்

    பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’

    September 12, 2025
    மாநிலம்

    அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
    • விளையாட்டாளர்களில் ஹெட் சிண்ட்ரோம் கைவிடப்பட்டது: இளைஞர்களிடையே அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அபாயங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
    • எந்த 10 உருப்படிகள் நீங்கள் தினமும் தொடும் மிக மோசமானவை என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்; கை கழுவுதல் என்பது உங்கள் சிறந்த பாதுகாப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.