Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு: ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு: ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு: ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பக்தர்கள் காளி, சிவன், முருகன் இதிகாச கதாபாத்திரங்கள், குரங்கு, புலி, வேடன் காவலர், ஆண்கள், பெண்கள் போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடமிடுவர்.

    பின்னர் 48 நாட்கள் வரை விரதம் இருந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று தசரா இறுதி நாளில் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவர். கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம், சின்னத்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து அவர்களை தசரா குழுவுடன் ஆபாசமான, இரட்டை அர்த்த திரைப்படப் பாடல்களுக்கு அரை குறை ஆடைகளுடன் பொதுவெளியில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து 2017-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தசரா விழாவில் அரை குறை ஆடைகளுடன் ஆடுபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும் ஆபாசமான பாடல்களுக்கு ஆடுவது தொடர்கிறது. இது தசரா விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் மன உறுதியைச் சீர்குலைக்கும் விதமாக உள்ளது. கடந்த 2023-ல் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் கோயில் விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சி, கோயில் தொடர்பானதாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதை 2023, 2024 தசரா விழாவில் தசரா குழு மற்றும் காவல்துறை பின்பற்றவில்லை. எனவே, தசரா குழுவினர் ஆபாசமான பாடல்கள்பாடவும் ஆடவும் அனுமதிக்க தடை விதித்தும், கடந்த 2023-ல்பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து ‘‘குலசேகரபட்டினம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், உள்ளூரைச் சேர்ந்த தலா ஒரு முதியவர், இளைஞர், பெண் என 5 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஆபாச நடனம் ஆடுவது உள்ளிட்ட விதிமீறல்கள் உள்ளதா? என்பதை இக்குழு ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.9-க்கு தள்ளிவைக்கப்படு கிறது’’ என உத்தரவிட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

    September 25, 2025
    மாநிலம்

    சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்

    September 25, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு: பால் பொருட்கள் விலையை ஆவின் குறைக்க நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் வலியுறுத்தல்

    September 25, 2025
    மாநிலம்

    நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: கிராந்தி குமார் பாடி தகவல்

    September 25, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

    September 25, 2025
    மாநிலம்

    அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் தவெக ஈடுபட்டதாக வீடியோ: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
    • மிலிண்ட் சோமன் காலை உணவுக்கு தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார், அவர் ஏன் 60 வயதில் இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதை இப்போது நாங்கள் அறிவோம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு
    • சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல்
    • தேங்காய் மலாய் சாப்பிடுவது ஏன் ஆற்றல், இதயம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.