Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
    மாநிலம்

    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    adminBy adminAugust 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.

    இஸ்ரோ சார்​பில் நாட்​டின் 2-வது ராக்​கெட் ஏவுதளம் தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினத்​தில் அமைக்​கப்​படு​கிறது. இங்கு 2,292 ஏக்​கர் பரப்​பில் ரூ.986 கோடி​யில் ராக்​கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி கடந்த 2024 பிப். 28-ல் அடிக்​கல் நாட்​டி​னார். தொடர்ந்​து, குலசேகரன்​பட்​டினத்​தில் பல்​வேறு கட்​டமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்​நிலை​யில் ரூ.100 கோடி​யில் ராக்​கெட் லாஞ்ச் பேட் எனப்​படும் ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான பூமி பூஜை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

    மாவட்ட ஆட்​சி​யர் க.இளம்​பகவத் தலைமை வகித்​தார். ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான பணி​களை தொடங்​கி​வைத்த இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: குலசேகரன்​பட்​டினம் ராக்​கெட் ஏவுதளத்​தில் இருந்து ஆண்​டுக்கு 25-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​கோள்​கள் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இஸ்​ரோவுக்கு ஆந்​திரா மாநிலம் ஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி ஆய்வு மையத்​தில் மட்​டுமே ராக்​கெட் ஏவுதளம் அமைந்​துள்​ளது.

    அங்​கிருந்து நமது செயற்​கைக்​கோள்​கள் மற்​றும் பல்​வேறு உலகநாடு​களின் செயற்​கைக்​கோள்​கள் ஏவப்​பட்டு வரு​கின்​றன. பிஎஸ்​எல்வி, ஜிஎஸ்​எல்வி போன்ற ராக்​கெட்​டு​களின் உதவியோடு பல செயற்​கைக்​கோள்​கள் இங்​கிருந்து விண்​ணில் ஏவப்​படு​கின்றன. தற்​போது, நாட்​டின் 2-வது ஏவுதளத்தை அமைக்​கும் பணி​யில் இஸ்ரோ ஈடு​பட்​டிருக்​கிறது. அதற்​காக, தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உள்ள குலசேகரன்​பட்​டினம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இங்கு ராக்​கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் நிறைவடைந்​து, கடந்த ஆண்டு பிப்​ர​வரிமாதம் பிரதமர் நரேந்​திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

    கடந்த 6 மாதங்​களாக ராக்​கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்​தில் உட்​கட்​டமைப்பு பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ராக்​கெட் ஏவுதளம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா தற்​போது நடை​பெற்​றுள்​ளது. தற்​போது ரூ.100 கோடி​யில் முக்​கிய​மாக 33 கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அடுத்த ஆண்டு நவம்​பர் மாதத்​தில் குலசேகரன்​பட்​டினத்​தில் இருந்து ராக்​கெட் ஏவப்​படும்.

    இதற்​கான இடம் வழங்​கிய தமிழக அரசுக்​கும், தமிழக முதல்​வருக்​கும் நன்​றி. அடுத்த 3 மாத காலத்​துக்​குள் சிறிய ரக ராக்​கெட் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அடுத்த ஆண்டு இங்​கிருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்​கெட் விண்​ணில் ஏவப்​படும். தனி​யார் ராக்​கெட்​டு​களும் இங்​கிருந்து ஏவப்​படும். அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதத்துக்குள் அனைத்து பணி​களும் நிறைவடை​யும். குலசேகரன்​பட்​டினம் இந்​திய வரைபடத்​தில் முக்​கிய இடத்தை பிடித்​துள்​ளது. இங்​கிருந்து ஆண்​டுக்கு 25 ராக்​கெட்​கள் வரை ஏவ திட்ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

    நிகழ்ச்​சி​யில், ஸ்ரீஹரி​கோட்டா சதீஷ் தவன் விண்​வெளி மைய இயக்​குநர்​கள் ராஜ​ராஜன், பத்​மகு​மார், மகேந்​திரகிரி இஸ்ரோ உந்​து​விசை வளாக இயக்​குநர் ஆசீர் பாக்​கிய​ராஜ், குலசேகரன்​பட்​டினம் ராக்​கெட் ஏவுதள திட்ட இயக்​குநர் சரவண பெரு​மாள்,எஸ்​.பி. ஆல்​பர்ட் ஜான், மாவட்ட வன அலு​வலர் ரேவதி ரமன், திருச்​செந்​தூர் டிஎஸ்​பி மகேஷ்கு​மார்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள்

    August 29, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

    August 29, 2025
    மாநிலம்

    சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

    August 29, 2025
    மாநிலம்

    பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் – முழு விவரம்!

    August 29, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு: அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி யோசனை

    August 28, 2025
    மாநிலம்

    ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்!

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள்
    • தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் செயலி: காரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
    • செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
    • அமெரிக்க விமானப்படையின்  எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை
    • அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.