Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
    மாநிலம்

    குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

    adminBy adminSeptember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: குரோம்பேட்​டை, பல்​லா​வரம் பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட காரண​மான கால்​வாய்​களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு​மை​யாக அகற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக, டேவிட் மனோகர் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “குரோம்​பேட்​டை, பல்​லா​வரம் மற்​றும் ஜிஎஸ்டி சாலை பகு​தி​களில் மழை காலங்​களில் கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு ஏற்​படு​கிறது. சாலை​யோர கால்​வாய்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முறை​யாக அகற்​றாததும், குப்​பைகளை கொட்​டும் இடங்​களாக மாற்​றி​யிருப்​பதும் முக்​கிய காரணம். பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் வடி​கால் வசதி​யும் இல்​லை.

    பல்​லா​வரம் பெரிய எரி​யில் இருந்து வெளி​யேறும் தண்​ணீர் குரோம்​பேட்டை வெற்றி தியேட்​டருக்கு எதிரே செல்​லும் கால்​வாய், தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனை அருகே செல்​லும் கால்​வாய், பல்​லா​வரம் பாண்ட்ஸ் சிக்​னல் அருகே செல்​லும் கால்​வாய் ஆகிய​வற்​றின் மூலம் வெளி​யேறும் சூழலில் இந்த கால்​வாய்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ள​தால், மழைநீர் செல்ல வழி​யின்றி சாலைகளில் வழிந்​தோடி தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படு​கிறது.

    எனவே, மழைக்​காலம் நெருங்​கும் முன்​பாக இப்​பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்ற வேண்​டும் என மாவட்ட ஆட்​சி​யர், தமிழக அரசின் முதன்மை செயலர், பொதுப்​பணித்​துறை செயலர் உள்​ளிட்​டோருக்கு மனு அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை” என, அதில் கூறி​யிருந்​தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஒய்​.க​விதா ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் 3 வார காலத்​தில் பதிலளிக்க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மீலாது நபி தினத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து

    September 4, 2025
    மாநிலம்

    அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    September 4, 2025
    மாநிலம்

    அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன்

    September 4, 2025
    மாநிலம்

    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீலாது நபி தினத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
    • எங்கள் இறுதி தருணங்களில் உண்மையில் என்ன நடக்கிறது: பெரியவர்களும் குழந்தைகளும் மரணத்தை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சந்திர கிரஹான் 2025: இது ஏன் இரத்த மூன் என்று அழைக்கப்படுகிறது? இந்தியாவில் எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
    • தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.