Last Updated : 05 Sep, 2025 06:21 AM
Published : 05 Sep 2025 06:21 AM
Last Updated : 05 Sep 2025 06:21 AM

சென்னை: சென்னை காவல் துறையில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராமலிங்கம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கள்ளுப்பட்டியை சேர்ந்தவர். இவர் கடந்த 2011-ல் நேரடி எஸ்.ஐ.யாக தேர்வாகி நாகை, சென்னை, ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி இந்த ஆண்டில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார். 6 முறை தோல்வி அடைந்து 7-வது முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதை அறிந்த காவல் ஆணையர் அருண், அவரை நேரில் அழைத்து பாராட்டினார். நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உடனிருந்தார். குரூப்-1 வயது வரம்பு 39 என உள்ள நிலையில் 38-வது வயதில் தேர்வு எழுதி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US
தவறவிடாதீர்!