Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கோரி  வழக்கு
    மாநிலம்

    கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கோரி  வழக்கு

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கோரி  வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நாளை (மே 31) ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கக் கோரி போக்குவரத்து ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனஜா முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவள்ளுவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடத்துநராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2018-ம் ஆண்டு டிக்கெட் பரிசோதகர் பதவி உயர்வுக்கான பட்டியலில் என்னை விட ஜூனியரின் பெயர் எனக்கு முன்பாக இருந்தது. இதுதொடர்பாக புகார் அளித்ததால் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் எனக்கு டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் பணிமனை மேலாளரான சீனிவாசன், அப்போது அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளராக பணியாற்றிய பொன்முடி எனக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நேர கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய என்னை மேலாளர் புதுச்சேரி பணிமனைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.

    அங்கு எனக்கு எந்த பணியும் ஒதுக்காமல் அலைக்கழிப்பு செய்தனர். இந்நிலையில் கடந்த 2018 செப்.21 முதல் 2019 மார்ச் 2 வரை பணிக்கு வரவில்லை என என்மீது குற்றம் சாட்டியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணியில் சேர்ந்தேன். இந்நிலையில் அப்போது பொதுமேலாளராக பணியாற்றிய பொன்முடி தற்போது அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநராக பணியாற்றி மே 31-ம் தேதியுடன் (சனிக்கிழமை) ஓய்வு பெறவுள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதிய பலன்களை வழங்காத நிலையில், இவருக்கு மட்டும் ஓய்வு பெற்ற மறுநாளே ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் உடனடியாக கிடைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். எனவே ஊழல் புகாரில் சிக்கியுள்ள இந்த அதிகாரி மீதான லஞ்ச புகார் குறித்த விசாரணை முடிவுக்கு வரும் வரவில்லை. எனவே, அவருடைய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். பாலமுகி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 1, 2025
    மாநிலம்

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    July 1, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி
    • எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு
    • அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு
    • மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.