Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கீழடி விவகாரத்தில் தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம்: முதல்வர் திட்டவட்டம்
    மாநிலம்

    கீழடி விவகாரத்தில் தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம்: முதல்வர் திட்டவட்டம்

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கீழடி விவகாரத்தில் தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம்: முதல்வர் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘கீழடி அகழாய்வு விவகாரத்தில், தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் .

    கருணாநிதி எச்சரிக்கை: கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும்.

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2016-ம் ஆண்டு, ‘ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்துக்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்’ என்று சமூக வலைதளம் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அவர் எச்சரித்தது போலேவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திய தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. இதனால், மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.

    பல்வேறு டெஸ்ட்டுகள்: கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும், உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையிலேயே 2023-ம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.

    ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலம்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய அரசு, கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பி அனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல்.

    தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் பாஜக நிரூபிக்கவில்லை. ஆனால், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஏற்க மனம் வரவில்லை.

    அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசின் மொழிவெறி – இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை.

    தமிழகத்துக்கு துரோகம்: தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை.

    தமிழக பாஜகவினரும் தங்கள் இன – மொழி உணர்வை பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல்கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை அமர்வு தடை

    July 21, 2025
    மாநிலம்

    ‘இதுவே கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை உடனே வழங்குக’ – அன்புமணி

    July 21, 2025
    மாநிலம்

    கிட்னியை விற்பனை செய்தவர் வெளியிட்ட ஆடியோ வைரல் – நாமக்கல் சுகாதாரத் துறையினர் ஆய்வு

    July 21, 2025
    மாநிலம்

    ரஷ்யாவில் ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ மாணவரை கைது செய்து போருக்கு அனுப்ப திட்டம்: பெற்றோர் கூறுவது என்ன?

    July 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை; எம்.பி.க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? – துரை.ரவிக்குமார் ஆதங்கம்

    July 21, 2025
    மாநிலம்

    அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? – அன்வர் ராஜா பேட்டி

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை அமர்வு தடை
    • உங்கள் பூனை நீரிழப்பு செய்யப்பட்டதா என்று எப்படி சொல்வது: 5 எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு சிகிச்சையளிப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • ‘இதுவே கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை உடனே வழங்குக’ – அன்புமணி
    • சீனப் பெண் மூளை இரத்தக்கசிவுக்கு ஆளாகிறாள், தீவிர வெப்ப அலைகளின் போது சூரிய ஒளியின் பின்னர் கோமாவில் நழுவுகிறாள்; பாதுகாப்பான வரம்பு மற்றும் உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.