Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு: இபிஎஸ்
    மாநிலம்

    கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு: இபிஎஸ்

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு: இபிஎஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: “அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுக்கு தெளிவாக விளக்கமளித்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை கடந்த 2015 முதல் 2017 வரை மத்திய அரசு நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியில் துறை அனுமதி பெற்று 2018-ல் அதிமுக அரசு மேற்கொண்டது. கடந்த 2019-ல் 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

    அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.5 கோடியில் கீழடி அகழ்வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டினோம். அதன் பிறகு தான் ஆட்சி மாற்றம் வந்தது.

    அதிமுக அரசு 6 கரிம மாதிரிகளை அமெரிக்கா நாட்டில் புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்பியதில், கீழடி நாகரிகத்தின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டது.

    கீழடி அகழ் வைப்பகத்தை பார்வையிட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

    கடந்த 2018-ல் நான் சட்டப்பேரவையில் பேசியபோது, ‘கீழடி ஆய்வு நம் பாரம்பரிய பெருமையை உணர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது’ என குறிப்பிட்டேன். அதிமுக அரசு, அமெரிக்கா சிகாகோ நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நிதியுதவி செய்தது. அங்கு முதன்முறையாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தினோம். அந்த கண்காட்சிக்கு ‘கீழடி என் தாய்மடி’ என பெயரிடப்பட்டது.

    மேலும் 6,720 தொல்பொருட்களை மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தோம். கடந்த 2020-ல் சென்னை புத்தக கண்காட்சி அரங்கத்திலும் கீழடி தொல் பொருட்களை காட்சிக்கு வைத்தோம். ஆனால் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

    தொல்லியல் துறைக்கு அதிமுக அரசு 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.105 கோடி நிதி ஒதுக்கியது. தமிழகத்தில் நடந்த 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வில் அதிமுகவுக்கு பங்கு உண்டு. மைசூரில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை தமிழகத்துக்கு கொண்டு காட்சிப்படுத்திய பெருமை அதிமுக அரசுக்கு உண்டு.

    கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. இதில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கையில் மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது? . திமுக அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. கீழடி ஆய்வுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. கீழடி விவகாரத்தில் மாநில அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.

    தமிழகத்தில் 196 அரசு கலை கல்லூரிகளில் 96-ல் மட்டுமே முதல்வர்களே இல்லை. பல கல்லூரிகளில் பேராசிரியர்களோ, மற்ற பணியாளர்களோ இல்லை. மருத்துவத் துறையிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. டீன்களே நியமிக்க முடியவில்லை.

    2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறி நிரப்புவதாக கூறினார்கள். திமுக ஆட்சியில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி உள்ளனர். காலிப்பணியிடங்கள் அதிகரித்ததால் நிர்வாகம் முறையாக செயல்பட முடியவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னடைவு அடைந்திருப்பதற்கு இந்த அரசு முறையாக செயல்படாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘ஜெ. செய்தது வரலாற்றுப் பிழை அல்ல; புரட்சி’ – கடம்பூர் ராஜூவுக்கு ஓபிஎஸ் பதிலடி

    July 31, 2025
    மாநிலம்

    பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

    July 31, 2025
    மாநிலம்

    ‘மேயரை மாற்ற வேண்டும் என்றாலும் மாற்றிவிடுங்கள்…’ – சேலம் திமுக-விலும் சேம் சைடு கோல்!

    July 31, 2025
    மாநிலம்

    சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

    July 31, 2025
    மாநிலம்

    சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிப்பு

    July 31, 2025
    மாநிலம்

    மெட்ரோவில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை: மீறினால் அபராதம்

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஜெ. செய்தது வரலாற்றுப் பிழை அல்ல; புரட்சி’ – கடம்பூர் ராஜூவுக்கு ஓபிஎஸ் பதிலடி
    • ஆண்களில் அடிக்கடி இரவுநேர சிறுநீர் கழித்தல் புரோஸ்டேட் புற்றுநோயின் அடையாளமா? நொக்டூரியா | பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
    • அறிவியலின் படி ஏன் உங்கள் முதுகில் தூங்குவது மோசமானது, – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுனாமியில் கப்பல் கப்பல்களுக்கு என்ன நடக்கும்? கடலின் நம்பமுடியாத அறிவியல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.