Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்
    மாநிலம்

    கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் அகழாய்வுப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே எடப்பாடியார் ஆட்சியில்தான். உண்மையை மறைத்து வாய்கிழிய கத்தும் திமுகவுக்கு கண்டனம்.

    திமுக எப்படிப்பட்ட கேவலமான, அப்பட்டமான சாதி வெறி பிடித்த கட்சி என்பதை, தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொண்டு நிற்கிறது. சாதிவெறி மனப்பான்மை, உருவக் கேலி இதெல்லாம் தான் திமுக கடைபிடிக்கும் `திராவிட’ கொள்கைகளா?. ஆனால், அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டதன் காரணமே சாதி பேதத்தை அகற்றுவதற்காகத்தான்.

    எடப்பாடி எளிய மனிதர், ஒரு விவசாயி, தன் உழைப்பால் உயர்ந்து முதல்வராகி, இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் மிகக் கேவலமான, அவதூறான சாதிய வன்மத்தில், தனிமனித விமர்சனத்தில் இறங்கியுள்ளது திமுக. விவசாயிகளின் உழைப்பை, கஷ்டங்களை அறிந்தவர். வயல்வெளியில் வியர்வை சிந்தி விவசாயம் செய்தவர் தான் எங்கள் பொதுச் செயலாளர். அதில் எங்களுக்கு பெருமையும், கர்வமும் எப்போதும் உண்டு.

    போட்ட சட்டையையே கிழித்துக்கொண்டு `ஐயோ, அம்மா’ என்று உங்கள் தலைவர் ஸ்டாலின் கதறிய காட்சிகளை கார்ட்டூனில் எல்லாம் வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதெல்லாம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்ததை யாரும் மறக்கவில்லை.

    கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான்! வாய்கிழிய உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

    சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுப் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கி 18.4.2018 அன்று அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டு செப்டம்பர் 2018-ல் பணிகள் முடிக்கப்பட்டன. அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு, 5820 அரிய வகை தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து உலகத் தரம் வாய்ந்த தள அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.

    ஏதேனும் சந்தேகம் இருந்தால் இத்திட்டங்களை முன்னிருந்து செயல்படுத்திய அதிகாரி, இப்போதைய நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், ஐஏஎஸ்ஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத் தான் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓரணியில் தமிழ்நாடு: திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    July 26, 2025
    மாநிலம்

    “அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” – தமிழிசை

    July 26, 2025
    மாநிலம்

    “உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்கே சொந்தமானவை” – அமைச்சர் எஸ்.ரகுபதி

    July 26, 2025
    மாநிலம்

    “பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    July 26, 2025
    மாநிலம்

    ராமதாஸின் எச்சரிக்கையை மீறிய அன்புமணியின் நடைபயணம் சட்ட விரோதமானது: பாமக

    July 26, 2025
    மாநிலம்

    சம வேலைக்கு சம ஊதியம் கோரி காலவரையற்ற போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓரணியில் தமிழ்நாடு: திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
    • “நான் வார்த்தைகளால் நல்லவன் என்று நினைத்தேன்- என் 10 வயது வெளியே என்னைப் பேசும் வரை!” – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” – தமிழிசை
    • அவர் 18 வயதில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை கட்டினார், புற்றுநோயை 19 ஆல் எதிர்த்துப் போராடினார், மேலும் வலுவாக வந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூமியில் உலகளாவிய சமூகத்திற்கு பயனளிப்பதற்கான நிசார் மிஷன் அவதானிப்பு: இஸ்ரோ தலைவர் – இந்தியாவின் காலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.