Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கீழடியை வைத்து அரசியல் செய்யும் திமுக அரசு: பாண்டியராஜன் குற்றச்சாட்டு
    மாநிலம்

    கீழடியை வைத்து அரசியல் செய்யும் திமுக அரசு: பாண்டியராஜன் குற்றச்சாட்டு

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கீழடியை வைத்து அரசியல் செய்யும் திமுக அரசு: பாண்டியராஜன் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக. கீழடியை வைத்து அரசியல் செய்யும் இயக்கம் திமுக. கீழடிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. கீழடி விவகாரம் வந்த பிறகு அகழ்வாய்வு துறை தொடங்கியது போன்று திமுக கட்டமைக்கிறது.

    தமிழகத்தில் இதுவரை 39 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதில் அதில் 33 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டது அதிமுக அரசு. ஈரோடு அடுத்த கொடுமணலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பதனம் செய்து தமிழன் பயன்படுத்திய சான்று கிடைத்துள்ளது. இதை ஏதோ தானே வந்து கண்டுபிடித்தது போன்று ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். அந்த கொடுமணல் அகழாய்வு திட்டத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியது பழனிச்சாமி ஆட்சியில் தான்.

    ‘கீழடி என் தாய்மடி’ என்ற வார்த்தையை நான் தான் உருவாக்கினேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவுக்கும் பிறகு அமெரிக்காவில் முதன்முறையாக உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது பழனிச்சாமி தான். பாண்டிய நாட்டின் மிக முக்கிய துறைமுகமாக இருந்த அழகன்குளத்தில் 3 முறை அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 8 அகழ்வாய்வுகள் நடக்கின்றன.

    இவற்றுக்கெல்லாம் வித்திட்டது பழனிசாமி தான். திமுக அரசு 2006- 2011 வரை கீழடியில் அகழ்வாய்வு செய்ய கோரிக்கை வைத்தும் அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. அந்த ஆட்சியில் அகழ்வாய்வு துறைக்கு வெறும் ரூ.9 கோடி மட்டும்தான். பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.105 கோடி ஒதுக்கியுள்ளார்.

    கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வுசெய்து, கிபி 5-ம் நூற்றாண்டு முதல், கிமு 5-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என அறிக்கை அளித்தால், 1000 ஆண்டில் எந்த ஆண்டு என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். கீழடியை கண்டுபிடித்தது ஸ்டாலின் தான் என கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    September 11, 2025
    மாநிலம்

    நோயாளிக்கு சக்கர நாற்காலி மறுப்பு விவகாரம்: கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    September 11, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறுதான்: அமைச்சர் அன்பில் மகேஸ்

    September 11, 2025
    மாநிலம்

    பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை

    September 11, 2025
    மாநிலம்

    சபரீசனின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    September 11, 2025
    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க…’ – சிவகார்த்திகேயனுக்கு ரஜினி பாராட்டு
    • அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • குறைந்த இரத்த சர்க்கரை உணவு வழிகாட்டி: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் எடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஞ்ஞானிகள் ஆப்பிரிக்காவைப் பிரித்து புதிய கடலை உருவாக்கக்கூடிய ‘புவியியல் இதயத் துடிப்பு’ கண்டறிந்தனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தா.செ.ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.