Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கிருஷ்ணகிரி வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டோருக்கு பட்டா வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு  
    மாநிலம்

    கிருஷ்ணகிரி வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டோருக்கு பட்டா வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு  

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கிருஷ்ணகிரி வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டோருக்கு பட்டா வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு  
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டுவதற்காக, வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டும்போது வனப்பகுதி கிராமங்களான கொத்துப்பள்ளி, கொட்டாவூர் கிராம மக்களை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வசித்தவர்கள் சூலகிரி தாலுகாவில் உள்ள துரிஞ்சிப்பட்டி மற்றும் கோட்டையூர் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து வெளியேறும்படி வனத்துறையினர் பொதுமக்களை நிர்பந்தம் செய்ததை எதிர்த்து அந்த கிராமங்களைச் சேர்ந்த 272 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அதில், “கேஆர்பி அணை கட்டுவதற்காக எங்களது முன்னோரை தமிழக அரசு 70 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி தற்போது வசிக்கும் கிராமத்தில் குடியமர்த்தியது. இந்த கிராமங்களில் நாங்கள் அன்றாடம் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த கிராமங்களைத் தவிர்த்து வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் வீடுகளைக் கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு முறையான மின் இணைப்பு பெறப்பட்டு, சொத்து வரியும் செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 2023-ம் ஆண்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தற்போது நாங்கள் குடியிருக்கும் கிராமங்களை பஞ்சாயத்தில் இருந்து விடுவித்து வனத்துறை என அறிவித்து மாவட்ட ஆட்சியர் கடந்த 1975-ம் ஆண்டு மார்ச் 22 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அந்த உத்தரவை சுட்டிக்காட்டி எங்களை கிராமங்களை விட்டு வெளியேறும்படி வனத்துறை அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.

    விவசாயம் செய்யக்கூடாது எனவும் நிர்பந்தம் செய்து வருகின்றனர். எனவே கடந்த 70 ஆண்டுகளாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, “மனுதாரர்கள் ஏற்கெனவே அணை கட்டுவதற்காக அவர்கள் வசித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்தும் வெளியேறும்படி கூறுவது தவறானது. தற்போது மனுதாரர்கள் வசிக்கும் இந்த கிராமங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தது சட்ட ரீதியாக தவறு.

    கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஓசூர் சார்ஆட்சியர் கடந்தாண்டு டிச.31 அன்று கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே அதன் அடிப்படையில் மனுதாரர்களுக்கு பட்டா வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டனர். இதையேற்ற நீதிபதி, மனுதாரர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 8 வார காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

    September 24, 2025
    மாநிலம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விவகாரம்: அரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

    September 24, 2025
    மாநிலம்

    மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    உபரி வருவாய் ஈட்டுவதில் குஜராத், உ.பி.யை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

    September 24, 2025
    மாநிலம்

    பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாட்ஸ்அப் மெசேஜ்களை துரிதமாக மொழிபெயர்க்கும் அம்சம்: பயன்படுத்துவது எப்படி?
    • 881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்
    • நவரத்ரி 2025 க்கான 5 சிறந்த மெஹெண்டி வடிவமைப்புகள்
    • அபிஷேக் சர்மா அதிரடி: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு – ஆசிய கோப்பை IND vs BAN
    • இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விவகாரம்: அரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.