Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கிருஷ்ணகிரி சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கிருஷ்ணகிரி சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கிருஷ்ணகிரி சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு திட்ட நிதி வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பிரசன்ன ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் மாடக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு பணி உத்தரவு வழங்கி அரசாணை வெளியிட்டனர்

    இதனைத் தொடர்ந்து கரடிகள் சாலை முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை கடந்த 2023-ல் செய்து முடித்தேன். 80% பணியை முடித்துக் கொடுத்தேன்.

    இதற்கான தொகையை நான் கேட்டபோது இதற்கு தனியாக பணம் வழங்கினால் தான் இந்த சாலை திட்ட பணிக்கான நிதியை வழங்குவதற்கு அனுமதி அளிப்போம் என தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மற்றும் மாடக்கல் பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் கூறினர்.

    இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாயும் பிறகு 2 லட்சம் ரூபாயும் நான் வழங்கினேன்.

    ஆனாலும் சாலை அமைத்து கொடுத்ததற்கான அரசு நிதியை எனக்கு வழங்கவில்லை மாறாக இதே போன்று போலியான பணி செய்தல் தொடர்பான ஆவணங்களை தயாரித்து வேறொரு நபருக்கு அரசு நிதியை வழங்கியது போல அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

    எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சாலை அமைத்து கொடுத்த பணிக்காக ஒதுக்கீடு செய்த 39 லட்ச ரூபாயை எனக்கு வழங்க வேண்டும். மேலும் என்னிடம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்

    இந்த மனு வேறு நீதிமன்ற நீதிபதி மாலா முன்பு விசாரிக்க வந்தது அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ முருகவேல் ஆஜராகி வாதாடினார்

    இதனைத் தொடர்ந்து நீதிபதி மாலா இந்த வழக்கை பொறுத்தவரை அரசு திட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு தீவிரமானது என்றும் எனவே இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதி உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 7, 2025
    மாநிலம்

    இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

    July 7, 2025
    மாநிலம்

    போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை ஐகோர்ட் உத்தரவு

    July 7, 2025
    மாநிலம்

    வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: பின்னணி என்ன?

    July 7, 2025
    மாநிலம்

    அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு: ரூ.30 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் ரத்து

    July 7, 2025
    மாநிலம்

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் கோவி.செழியன்

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரோன்களில் புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக ஹைலைட்ஸ்
    • மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    • கோல்டன் விசா நாடுகள்: கிரேக்கத்திலிருந்து மால்டா வரை: மிகவும் இலாபகரமான தங்க விசாக்கள் மற்றும் ஒன்றை எவ்வாறு பாதுகாப்பது
    • இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
    • கல்லீரல் சிரோசிஸ் என்றால் என்ன? காரணங்கள், அறிகுறிகள், உணவு மற்றும் முக்கிய தடுப்பு உதவிக்குறிப்புகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.