Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘கிராமப்புற கடைகளுக்கும் தொழில் உரிமத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெறுக’ – அன்புமணி
    மாநிலம்

    ‘கிராமப்புற கடைகளுக்கும் தொழில் உரிமத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெறுக’ – அன்புமணி

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கிராமப்புற கடைகளுக்கும் தொழில் உரிமத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெறுக’ – அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் தொழில் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும். கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், லாபமும் தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் – வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும்.

    வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும்.

    இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” – நிகிதா வேதனை

    July 29, 2025
    மாநிலம்

    ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’

    July 29, 2025
    மாநிலம்

    “பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    July 29, 2025
    மாநிலம்

    மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

    July 29, 2025
    மாநிலம்

    “திமுகவினர் ரத்தம் சிந்தி உழைத்ததால்தான் நீங்கள் எம்.பி…” – சு.வெங்கடேசன் மீது மேயர், கவுன்சிலர்கள் கொந்தளிப்பு

    July 29, 2025
    மாநிலம்

    நீதித்துறை செயல்பாட்டில் ஓய்வு நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல: வாஞ்சிநாதன் வழக்கில் நீதிபதிகள் கருத்து

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” – நிகிதா வேதனை
    • குளிர் அல்லது மந்தமான நீர்? மருத்துவம் எடுப்பதற்கு எது சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டிரம்ப் சட்டத்தை மருத்துவ உதவியை குறைப்பதை அமெரிக்க நீதிபதி தடுக்கிறார்; திட்டமிடப்பட்ட பெற்றோர்ஹுட் கொண்ட பக்கங்கள், திட்டமிடப்படாத கர்ப்ப ஸ்பைக்கை மேற்கோள் காட்டி – இந்தியாவின் நேரங்கள்
    • ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’
    • உங்கள் முகப்பரு உண்மையில் ஒரு பூஞ்சை தொற்று என்பதை எப்படி அறிவது: பூஞ்சை முகப்பரு என்றால் என்ன, அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.