Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து
    மாநிலம்

    “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!” – திருப்புவனத்தில் ஓபிஎஸ் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்புவனம்: “காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகிறது. இந்நிலை நீடித்தால் திமுக ஆட்சி வீழ்ச்சியை எட்டுவது உறுதி” என முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: “காவல்துறை சட்டப்படி செயல்படாமல் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.

    போலீஸாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் உயிரிழந்தது மருத்துவ அறிக்கை மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பொதுவாக விசாரணை மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும். நீதிமன்றத்துக்குத்தான் சட்டப்படி நீதி வழங்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. ஆனால், காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகின்றது. இதற்கு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தில் இந்தச் சூழ்நிலை மாறவில்லை என்றால் திமுக ஆட்சி தனது வீழ்ச்சியை உறுதியாக எட்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துச் சிறப்பாக ஆட்சி செய்தார். ஆனால், திமுக ஆட்சியில் காவல் துறை அதிகாரிகளின் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது. இதன்படி நடந்தால் இதுபோன்று ஜனநாயகப் படுகொலை நடக்கும். குற்றவாளிகளை உடனடியாக விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

    அதிமுக தொண்டர்களின் உரிமையைக் காக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிமுகவைத் தொடங்கியபோது எம்ஜிஆர் சட்டவிதியை உருவாக்கி ஆயுட்காலம் வரை நடைமுறைப்படுத்தினார். அதன்பின்னர் 30 ஆண்டு காலம் ஜெயலலிதா வழிநடத்தினார். தமிழகத்தில் பெருவாரியான மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அனைத்து திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தின் 52 சதவீத நிதியை மக்களுக்குப் பயன்படுத்தினார். தற்போது அந்த நிலை தமிழகத்தில் இல்லை. யார் முதல்வராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

    July 6, 2025
    மாநிலம்

    என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ்

    July 6, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

    July 6, 2025
    மாநிலம்

    “ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – விஜய்க்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு

    July 5, 2025
    மாநிலம்

    புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஆட்சியாளர்கள் இமாலய ஊழல்: நாராயணசாமி

    July 5, 2025
    மாநிலம்

    “நிகிதாவை விசாரிக்க வேண்டும்” – திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா வலியுறுத்தல்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா
    • ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு
    • அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்
    • இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.