Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
    மாநிலம்

    காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை, மின்வாரியம் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்” என, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் 9,331 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதோடு, எஞ்சிய 40 சதவீத மின்சாரம், மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் 2 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலைகளை அமைத்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் மின்தொடரமைப்புக் கழகத்தின் மின்வழித் தடத்தில் இணைத்துள்ளன.

    இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்தக் காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினசரி சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட் காற்றாலை மின்சாரத்தை ரூ.3.10-க்கு மின்வாரியம் வாங்குகிறது. கடந்த 2024 ஜுலை 30-ம் தேதியன்று 5,899 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதுவே, இதுவரை காற்றாலைகளில் இருந்து கிடைத்த அதிகபட்ச மின்சார அளவாகும். கடந்த மாதம் வரை காற்றாலைகளில் இருந்து 800 மெகாவாட் குறைவாக மின்சாரம் கிடைத்தது.

    இம்மாதம் சீசன் தொடங்கி உள்ளதால் சில தினங்களாக ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. இந்நிலையில், காற்றாலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரியத்துக்கு, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து, அச்சங்கத்தின் முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம் கூறியதாவது: இந்திய வானிலை மையம் அறிக்கையின் படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 25-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று தொடங்குவதால், காற்றாலைகளில் இனி அதிக மின்சாரம் கிடைக்கும். நடப்பு சீசனில் இயற்கையாக கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அடுத்த இருவாரங்களுக்கு காற்றாலைகள் இணைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையங்கள், மின்வழித் தடம், மின்மாற்றிகள் ஆகியவற்றில் முழு வீச்சில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து வழக்கத்தை விட அதிக மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த மின்சாரத்தை முழு அளவில் மின்வாரியம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    July 3, 2025
    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்
    • மிளகுக்கீரை எண்ணெய் Vs ரோஸ்மேரி எண்ணெய்: உடனடி முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்
    • “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
    • அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.