சென்னை: நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
எனவே தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள், உரிமம் பெற்ற மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் என அனைத்தும் அன்று மூடப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பை மீறி மது விற்றால், மது விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.