Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள்
    மாநிலம்

    காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள்

    adminBy adminAugust 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்​லுக்கு நாகரி​க​மான மாற்​றுச்​சொல்லை உரு​வாக்க வேண்​டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கால் – கை வலிப்பு சங்​கம் (எபிலிப்​சி) சார்பில் கால் – கை வலிப்பு பராமரிப்பு மற்​றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் – 2025’ என்ற தலைப்​பில் தேசிய கருத்​தரங்​கம் சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடந்​தது. 4 நாட்​கள் நடை​பெறும் இந்த கருத்​தரங்​கத்தை மேற்கு வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி நேற்று மாலை தொடங்கி வைத்து விழா மலரை வெளி​யிட்​டார்.

    சங்​கத்​தின் தலை​வர் பி.சதீஷ் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் பிந்து மேனன், இந்​திய கால் – கை வலிப்பு சொசைட்டி தலை​வர் சரத் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் விநயன், இகான் 2025 அமைப்​பின் தலை​வர் நடராஜன், செய​லா​ளர் மால்​கம் ஜெய​ராஜ் உட்பட இந்தியா மற்​றும் வெளி​நாடு​களில் இருந்து முன்​னணி நரம்​பியல் நிபுணர்​கள், வலிப்பு நோய்​களின் ஆராய்ச்​சி​யாளர்​கள் மற்​றும் துறை சார்ந்த மருத்​துவ நிபுணர்​கள் கலந்து கொண்​டனர்.

    கருத்​தரங்​கத்​தில் கால் – கை வலிப்பு கண்​டறிதல், சிகிச்சை மற்​றும் மேலாண்மை ஆகிய​வற்​றின் சமீபத்​திய முன்​னேற்​றங்​களை மருத்​து​வர்​கள் பகிர்ந்து கொண்​டனர். நிகழ்ச்​சி​யில் மேற்கு வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி பேசியதாவது: கடந்த 1958-ம் ஆண்டு ஏப்​ரல் 25-ம் தேதி மாநிலங்​களவை​யில் உறுப்​பினர் ஒரு​வர் பேசும்​போது, “ஒரு​வருக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டு, அவருக்கு மனநலம் சரி​யில்லை என கண்​டறியப்​பட்​டால், அவர் தூக்​கி​லிடப்​பட​மாட்​டார்” என்று பேசினார்.

    அப்​போது மாநிலங்​களவை தலை​வ​ராக இருந்த சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் குறுக்​கிட்​டு, “நல்ல மனநிலையே அசாதாரணமானது. மனநல பாதிப்​புக்கு பல நிலைகள் உள்​ளன. நாம் அனை​வரும் அதில் ஒரு வகை​யான பாதிப்​புக்கு உள்​ளானவர்​களே” என்​றார்.

    வலிப்பு நோய் என்​பது கடுமை​யான​தாக பார்க்​கப்​பட்​டாலும், அது குணப்​படுத்த கூடிய ஒன்று தான். இது​தான் இந்த மாநாட்​டின் கருப்​பொருள் ஆகும். ஆனாலும் அதை​யும் தாண்டி அனை​வர் மனதி​லும் இருப்​பது மனநல பாதிப்​பு​களால், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் எதிர்​கொள்​ளக்​கூடிய சவால்​களாகும்.

    நாம் அனை​வரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்​டும். நாம் அனை​வரும் மனநல பாதிப்பின் காரணங்​கள், விளைவு​கள் பற்​றிய புரிதல் இல்​லாமல் இருக்​கிறோம். அவை கட்​டுப்​பாட்டை மீறி செல்​கின்​றன. இவற்றை மருந்​துகள் மூல​மாக மட்​டுமே குணப்​படுத்த முடி​யாது என்​பதை புரிந்து கொள்ள வேண்​டும்.

    நமது மனநலம் சில சூழ்​நிலைகளில் பணி​வாக​வும், சில சூழ்​நிலைகளில் வலிப்​புத்​தாக்​கங்​களை போல திடீரென வியத்​தகு முறையிலும் இருக்​கலாம். நமக்கு இதி​காசங்​களை​யும் பல நூல்​களை​யும் வழங்​கிய நம்​முடைய மொழிகள், உடல் நல குறை​பாடுகளை போலன்​றி, மனநல குறை​பாடு​களுக்கு வெட்​கக்​கே​டான சொல்லை உரு​வாக்க தவற​வில்​லை. உளவியல் ரீதி​யாக பாதிக்​கப்​பட்​ட​வர்​களை அவமானப்​படுத்​து​வதற்கு முழு அகரா​தியே உள்​ளது.

    இதுவே ஒரு மனநல பாதிப்பை கையாளுவதை​யும், சிகிச்சை அளிப்​ப​தை​யும் கடின​மாக்​கு​கிறது. தொழு நோயாளி என்ற சொல் இப்​போதும் நாகரீக​மாக கருதப்​பட​வில்​லை. தொழு நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர் என்று தான் அழைக்​கப்​படு​கிறார்​கள். அதே​போல் வலிப்பு நோயை, காக்கா வலிப்பு என அவமானகர​மான சொல்​லால் அழைக்​கிறார்​கள். இது​போன்ற சொற்​களுக்கு நாகரி​க​மான மாற்று சொற்​களை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை 

    September 25, 2025
    மாநிலம்

    திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?

    September 24, 2025
    மாநிலம்

    881 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கோவி.செழியன்

    September 24, 2025
    மாநிலம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விவகாரம்: அரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

    September 24, 2025
    மாநிலம்

    மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: ஜாய் கிரிசில்டா ஐகோர்ட்டில் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்தியா: வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது!
    • முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை 
    • சரியான அளவு தண்ணீரை குடிப்பது பக்கவாதம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?
    • கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மற்றும் எடை மேலாண்மைக்கு பாதாம் பால்; அதன் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறியவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.