Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன்
    மாநிலம்

    “கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன்

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெரம்பலூர்: கவின் படுகொலையை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டார்.

    திருநெல்வேலி கவின் படுகொலையைக் கண்டித்தும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, திருமாவளவன் எம்.பி. பேசியது: “பட்டியலின மக்களுக்கு எதிரான இதுபோன்ற சாதிய படுகொலைகள் நிகழும்போது பெரிய அரசியல் கட்சிகளும், புதிய கட்சிகளும் மவுனமாக இருக்கின்றன. குறிப்பாக, கவின் படுகொலையை நடிகர் விஜய் கண்டிக்கவில்லை.

    திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சென்றபோது, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அதிமுக சார்பில் எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. ஆனால், சமூக அநீதிகளை தொடர்ந்து கண்டித்து வரும் விசிக மீது பிற கட்சிகள் வீண்பழி சுமத்துகின்றன.

    எம்ஜிஆரை அவமதித்து பேசிவிட்டேன் என கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் கொந்தளிக்கின்றனர். என்னைவிட எம்ஜிஆரை பாராட்டி பேசியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜெயலலிதாவையும், அவரது துணிச்சலையும் பாராட்டி இருக்கிறேன். அதிமுக என்ற கட்சி அழிந்துவிடக்கூடாது. அது வலுவுடன் இருப்பதுதான் நல்லது.

    எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இருந்ததால்தான் தமிழகத்தில் பாஜக போன்ற தேசிய கட்சிகளால் காலூன்ற முடியவில்லை. எனவே, பாஜகவின் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல், அதிமுக தனித்து செயல்பட்டு, தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் சாதி குறித்து நான் பேசிய கருத்துகளில் எந்த தவறும் இல்லை. அவர் சட்டப்பேரவையில் நடந்துகொண்டதை வைத்து அந்த கருத்தை கூறினேன். மற்றபடி, அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு கூறவில்லை.

    தமிழகத்தில் சாதியக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது அனைத்து சமூகத்திலும் நிகழ்கிறது. இது தமிழக பிரச்சினை மட்டுமல்ல, தேசிய அளவில் இருக்கும் பிரச்சினை. எனவே, இதுபோன்ற சாதியக் கொலைகளை தடுக்க மாநில அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.

    தமிழகத்தில் சாதியக் கொலைகளை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு சட்டம் கொண்டுவந்தால், மீண்டும் அவரே முதல்வர் ஆவார். அவர் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து” என்று திருமாவளவன் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    “ஓட்டு வாங்கிய பிறகு வாக்கு மாறிவிடுமா?” – போராடும் தூய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு

    August 11, 2025
    மாநிலம்

    கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

    August 11, 2025
    மாநிலம்

    அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

    August 11, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சி அமைந்ததும் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம்!” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

    August 11, 2025
    மாநிலம்

    “விஜய் கட்சியால் நாதக வாக்குகள் குறையுமென சிலர் சொல்வது ஓர் உத்தி” – சீமான்

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
    • பில் கேட்ஸ் உண்மையான வெண்ணெய் போல சுவைக்கும் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட கார்பன் வெண்ணெய் பின்வாங்குகிறது; இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதை சிறப்பானதாக்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஓட்டு வாங்கிய பிறகு வாக்கு மாறிவிடுமா?” – போராடும் தூய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு
    • உங்கள் தோட்ட மண்ணின் கருவுறுதலை இயற்கையாக வளப்படுத்தும் 12 எளிதான தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதன் பாப் எனும் ‘நைட்ரஸ்-ஆக்சைடு’!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.