Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
    மாநிலம்

    கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். நீதிபதி ஹேமா சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். தலைமறைவான சுர்ஜித்தின் பெற்றோரான சப் இன்ஸ்பெக்டர் தம்பதியை பாளையங்கோட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் இந்தக் கொலை தொடர்பாக சுர்ஜித் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதிரவைக்கும் வாக்குமூலம்: இந்த வழக்கில் கவினை கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சம்பவப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களிலும் கவினை சுர்ஜித் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், “எனது அக்காவும், கவின் செல்வ கணேஷும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தனர். இருவரும் நட்புடன் பழகிவந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அதில் உடன்பாடில்லை. இதுகுறித்து பல முறை எனது அக்காவை கண்டித்தேன். கவினையும் அழைத்து எச்சரித்தேன். ஆனால், எனது அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசிவந்தர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) எனது அக்காவை சந்திக்க சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த நான் அவரைப் பின் தொடர்ந்து சென்று, தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்தேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

    நடந்தது என்ன? – தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

    உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன?

    September 23, 2025
    மாநிலம்

    ‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்!

    September 22, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    மும்மொழிக் கொள்கை மீது குறுகிய அரசியல் பார்வை: திமுக மீது தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

    September 22, 2025
    மாநிலம்

    ஆவின் பால் விலையை குறைக்காதது மோசடி: ஜிஎஸ்டி அமல் விவகாரத்தில் தமிழக பாஜக சாடல்

    September 22, 2025
    மாநிலம்

    செப்.25-ல் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வு – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன?
    • உங்கள் கிரீன் டீயில் இந்த மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இயற்கையாகவே எடை இழக்க: இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘காந்தாரா 2’ பார்க்கும் முன் மது, அசைவம் சாப்பிடக் கூடாதா? – வைரல் போஸ்டரின் பின்னணி!
    • பித்தப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய உணவு: எளிதான செரிமானம் மற்றும் மீட்புக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பல் துலக்கியது, ஆனால் உங்கள் மூச்சு இன்னும் துர்நாற்றம் வீசுகிறதா? தொடர்ச்சியான கெட்ட சுவாசத்தின் மறைக்கப்பட்ட காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.