Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கவின் கொலை: நெல்லையில் தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் விசாரணை
    மாநிலம்

    கவின் கொலை: நெல்லையில் தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் விசாரணை

    adminBy adminAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கவின் கொலை: நெல்லையில் தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கொலை தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் நீதிபதி ச.தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையத்தின் துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் செ.செல்வக்குமார், முனைவர் சு.ஆனந்தராஜா, பொ.இளஞ்செழியன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார், காவல் துணை ஆணையர்கள் வினோத் சாந்தாராம், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவல் உதவி ஆணையர் சுரேஷ், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆணைய தலைவர் நீதிபதி ச.தமிழ்வாணன் கூறியது: “திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் செல்வகணேஷ் கொலை சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்வதற்கான உரிமை உள்ளவர்கள்.

    சாதிய கொலைகள் மனித சமுதாயத்திற்கு எதிரானது. இந்த கொலை சம்பவத்தை காவல் துறையும் வருவாய் துறையும் முறைப்படி அணுகி முறையான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சட்டத்தின்படி இந்த விவகாரத்தில் செய்ய வேண்டியது அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை சாதிய பிரச்சனைகளாக மட்டும் பார்க்காமல் சமூகத்துக்கான பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். சமூக நீதி காக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    நிரபராதிகள், அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆணையம் எதிர்பார்த்ததை காவல் துறையும் வருவாய் துறையும் செய்து வருகிறார்கள். அவர்களது நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. இதுபோன்ற தவறான செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தால் யாருக்கும் லாபம் இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது.

    சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஒரு சிலர் ஏற்க மறுத்து கொலைகளை ஆதரிக்கின்றனர். சாதிய படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம். மத்திய மாநில அரசுகளை இந்த விவகாரம் தொடர்பான சட்டம் கொண்டு வருவதற்கு ஆணையம் அழுத்தம் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்

    September 17, 2025
    மாநிலம்

    தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் மாஜி எம்எல்ஏக்கள்! – செப்.19 நாமக்கல்லில் என்ன நடக்கும்?

    September 17, 2025
    மாநிலம்

    காகித ஜிஎஸ்டி மறுசீரமைப்பை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: இந்திய காகித வர்த்தகர்கள் கோரிக்கை

    September 17, 2025
    மாநிலம்

    சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு

    September 17, 2025
    மாநிலம்

    12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்

    September 17, 2025
    மாநிலம்

    பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சார்லி கிர்க் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடி தாயாரின் ஏஐ வீடியோவை நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
    • ‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்
    • முடி உதிர்தல் தடுப்பு உணவுகள்: குடும்பத்தில் வழுக்கை மரபணுக்கள் உள்ளதா? முடி உதிர்தலைத் தடுக்க இந்த 5 உணவுகளை முயற்சிக்கவும்
    • நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எதிர்பார்த்ததை விட மிக முன்னதாக உருவாக்கும் சூப்பர்மாசிவ் கருந்துளைகளை வெளிப்படுத்துகிறது, ஆதிகால தோற்றம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.