Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, March 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    adminBy adminMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி சார்பில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் அளிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் க.சக்திவேல் பங்கேற்று உரையாற்றும்போது, “அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் கிராமம், கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில் வசித்து வந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீர்ப்பிடிப்பு மற்றும் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வருவதாகக் கூறி அவர்களை அங்கிருந்து அரசு வெளியேற்றி விட்டது.

    அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, ஆட்சியர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மேலும், புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றாமல், அவர்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கும் வகையில் பட்டா வழங்க வேண்டும்’’ என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய முற்போக்கு மக்கள் சக்தி கட்சித் தவைர் எம்.எல்.ரவி, ஜனநாயக மகளிர் கட்சி தலைவர் அம்மு ஆறுமுகம், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலாளர் சோபன் பாபு, மகளிர் பிரிவு செயலாளர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விண்வெளி வீரர்கள் ஏன் விண்வெளியில் மறைக்கப்பட்ட இரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ளலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பார்வையற்ற பாராலிம்பிக் பனிச்சறுக்கு வீரர் டேனெல்லே உம்ஸ்டெட் முடங்கிப்போய் எழுந்தார், பின்னர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் கண்டறியப்பட்டார்: அவள் எப்படி நடக்க, பனிச்சறுக்கு மற்றும் பதக்கங்களை வெல்ல மீண்டும் கற்றுக்கொண்டாள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Jada Pinkett Smith: Meet Oscar-banned actor Will Smith’s wife Jada Pinkett Smith: அவர்களது சிக்கலான உறவு மற்றும் ஸ்லாப்-கேட் அவர்களை எப்படி நெருக்கமாக்கியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டப்மினில் இந்தியன்: ‘நான் ஒரு புல்லரிப்பு அல்ல’: டப்ளினில் உள்ள இந்தியர், பேருந்தில் பெண்ணை துரத்தியதற்காக தண்டிக்கப்பட்டவர், பின்னணி சோதனை காரணமாக தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மக்கள் ஐஆர்எல்லை விட கற்பனையான கதாபாத்திரங்கள் ஏன் உணர்ச்சி ரீதியாக உண்மையானதாக உணர்கின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.