Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    மாநிலம்

    “கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: “தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனையில், டெல்லி சென்று வந்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்தது, டிடிவி தினகரனின் கருத்துகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது.

    இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை. கல்வியில் தமிழகம் பின்தங்கியே உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு விழா நடத்தி அரசு சுய விளம்பரம் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் 4,000-க்கும் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதை அரசு நிரப்பவில்லை. அரசு சிறப்பாக செயல்படுவதாக வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அதுபோன்ற நிலை இல்லை. அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது.

    காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஆட்சி அமைக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தை சந்தித்ததில் வியப்பேதும் இல்லை. சென்னையில் இருந்து திருச்சி வரும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று சந்தித்தேன்.

    கூட்டணி விவரங்களுக்கான பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்துவிடும். கூட்டணியை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த 2001-ம் ஆண்டில் திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்திருந்தது. ஆனால், அதிமுகவே வென்றது. இதுபோல் 1980 தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். 2-ம் முறை வெற்றி பெற்றார்.

    வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தொடங்குகிறோம். தொடர்ந்து மதுரையில் இருந்து யாத்திரை நடைபெறுகிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.

    திமுக அரசு வேண்டாம் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். பணம் கொடுத்தாலும் மிகப் பெரிய மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று அவர் பேசியுள்ளார்.

    டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் – ஒழுங்கை கெடுத்து வருகிறார். மது, கஞ்சா, போன்ற போதை பழக்கங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட்டு வங்கிக்கான அரசாங்கமாக தமிழக அரசு செயல்படுகிறது. விரைவில் இந்த அரசு வீழ்ந்துவிடும்.

    நிரந்தர பணி வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மாறிவிட்டது. ஏமாற்றி ஓட்டு வாங்கிய அரசாக இந்த அரசு உள்ளது. திமுகவை நம்பி காங்கிரஸ் கட்சி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு அக்கட்சி தள்ளப்படும். காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை திமுக தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது.

    வெளிநாட்டு முதலீடு குறித்த வெள்ளை அறிக்கையை நானும் பலமுறை கேட்டு வந்திருக்கிறேன். வெள்ளை அறிக்கை கேள்வி எழுப்பினால் டிஆர்பி ராஜா வெறும் வெற்றுக் காகிதத்தை காட்டுகிறார். இது ஜனநாயகமற்ற செயல். இந்த அரசாங்கமே வெற்று காகிதம்தான்” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்

    September 26, 2025
    மாநிலம்

    மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 26, 2025
    மாநிலம்

    பேனர் வைத்ததற்காக தவெக மீது மட்டுமே வழக்கு: சி.டி.நிர்மல்குமார் ஆவேசம்

    September 26, 2025
    மாநிலம்

    “தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து

    September 26, 2025
    மாநிலம்

    ‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி

    September 26, 2025
    மாநிலம்

    விஜய்க்கு சேரும் கூட்டத்தை சாதாரணமாக கருதக் கூடாது: பெங்களூரு புகழேந்தி

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘மத்திய அரசு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது’ – கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு வாதம்
    • தினமும் பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்கவும்: படிப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: சூர்யகுமாருக்கு 30% அபராதம்
    • மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • உலகில் மிகவும் விலையுயர்ந்த வீடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.