Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கர்ப்பிணிகள், முதியோர் முக கவசம் அணிய வேண்டும்: சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தல்
    மாநிலம்

    கர்ப்பிணிகள், முதியோர் முக கவசம் அணிய வேண்டும்: சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தல்

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்ப்பிணிகள், முதியோர் முக கவசம் அணிய வேண்டும்: சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. எனினும், பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்புமிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    கரோனா பரவலுக்கு பிறகு, இதய பாதிப்புகள், நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோயால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. நீண்ட காலமாக புகை பிடிப்பது, காற்று மாசு, தொழில்சார் நோய் பாதிப்புகள் போன்றவைதான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

    அதேபோல, கொழுப்புமிகு கல்லீரல் நோய் என்பதும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உலகம் முழுவதும் சுமார் 30 சதவீத மக்கள் இந்த நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மேற்கண்ட 2 நோய்கள் குறித்து கள பணியாளர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு திட்டங்களின் தொடர்ச்சியாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் விரைவில் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் 216 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 3 நாட்களில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்புகள் குணமடைகின்றன. இதுபோல பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் இருமினாலோ, தும்மினாலோ அவர்களது எச்சில் துகள் காற்றில் பரவக்கூடும். இதன்மூலமாக, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின்படி, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி சோப் போட்டு கைகளை கழுவுவது நல்லது. இணை நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும்போது, கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அது கரோனா இறப்பாக கருதப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதார துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, இணை இயக்குநர் (தொற்றா நோய்) கிருஷ்ணராஜ், திட்ட அலுவலர் (தொற்றா நோய்) பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

    July 1, 2025
    மாநிலம்

    சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

    July 1, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன் கருத்து

    July 1, 2025
    மாநிலம்

    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கால்பந்து அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
    • போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
    • மூத்த நடிகைகளின் அலமாரிகளால் ஈர்க்கப்பட்ட 5 ரவிக்கை வடிவமைப்புகள்
    • பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.