Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
    மாநிலம்

    கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியைப்போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா காலத்தில் பணியில் இறந்த 10 மருத்துவ பணி யாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி கருணை தொகை விரைவில் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    தொற்றுக்கு பயந்து உலகம் முழு வதும் ஸ்தம்பித்திருக்கும்போது இவர்கள் இரவும், பகலும் தங்கள் கடமைகளை செய்தனர். அவர்கள் பங்களிப்பு டெல்லியின் வர லாற்றில் மிகவும் தன்னலமற்ற அத்தியாயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். கர்நாடகா வில் கரோனா பேரிடரின்போதே, அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப் படுவதாக அறிவித்தனர்.

    தமிழகத்தில் அன்று மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவ ராகஇருந்தபோது, கரோனாபேரி டரின்போது பணியாற்றி உயிரிழக்கும் அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என குரல் எழுப்பினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு, மாநில அரசு இன்று வரை 10 காசு கூட நிவாரணம் தரவில்லை.

    இறந்த 11 மருத்துவர்களில் ஒரே ஒருவரான மருத்துவர் விவேகானந்தன் குடும்பம், அரசு வேலை கேட்டு கண் ணீருடன் முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்த பிறகும் இன்று வரை கருணை காட்டவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப் படும் பல நல்ல திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருவதாக நம் முதல்வர் பெரு மையாகக் குறிப்பிடுகிறார். ஆனால் டெல்லி முதல் கர்நாடகா வரை அரசு மருத்துவர் களை அங்கீகரிக்கும்போது, தமிழகம் மட்டும் அரசு மருத்து வர்களை அங்கீகரிக்க மறுப்பது வேதனை.

    அதனால், தமிழகத் தில் கரோனா பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த மருத்துவர் விவே கானந்தன் மனைவி திவ்யா வுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அர சாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் 

    October 7, 2025
    மாநிலம்

    ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், இபிஎஸ்: மருத்துவமனை வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த அன்புமணி 

    October 7, 2025
    மாநிலம்

    ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

    October 7, 2025
    மாநிலம்

    டிடிகே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர், கழிவுநீர் பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    October 7, 2025
    மாநிலம்

    முறைகேடு கண்டறியப்பட்டால் ஜல்ஜீவன் நிதி நிறுத்தப்படும்: தமிழக அரசுக்கு பாஜக அறிவுறுத்தல் 

    October 6, 2025
    மாநிலம்

    கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 7 சுகாதார நிலைமைகள் சியா விதைகள் உதவலாம்: இதயம், நீரிழிவு நோய், செரிமானம், எடை மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் 
    • போலி அரிசி சாப்பிடுவதை நிறுத்துங்கள்! கலப்படத்தை வேகமாகக் கண்டறிய எளிய தந்திரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், இபிஎஸ்: மருத்துவமனை வந்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த அன்புமணி 
    • இந்த விளையாட்டு மாற்றும் சமையலறை ஹேக்குகளுடன் நொடிகளில் பூண்டு உரிக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.