Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை
    மாநிலம்

    கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை கைது செய்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் உள்ளிட்டோர் விடிய, விடிய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    மேலும் தவெகவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு அவரும் கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் தவெகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு வி.பி.மதியழகனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள உறவினர் பவுன்ராஜ் வீட்டில் பதுங்கியிருந்த வி.பி.மதியழகனை தனிப்படையினர் நேற்றிரவு கரூர் அழைத்து வந்தனர். அவருடன் பவுன்ராஜும் அழைத்துவரப்பட்டார். கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மதியழகனிடம் கரூர் எஸ்.பி.கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரம்ஆனந்தன் மற்றும் வெளிமாவட்ட எஸ்.பிக்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதியழகனிடம் போலீஸார் இரவு முதல் விடிய, விடிய தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளரிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவதும், மற்றொரு தவெக ஆதரவாளரான பவுன்ராஜும் கைது செய்யப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தி வருவதும் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்

    October 1, 2025
    மாநிலம்

    பலன் கொடுக்குமா பள்ளபட்டி ஜாதகம்? – அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தை சுற்றும் உடன்பிறப்புகள்!

    October 1, 2025
    மாநிலம்

    எங்களுக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொகுதி வேணும்! – பாஜக கோரிக்கையால் கதிகலங்கும் கோவை அதிமுக

    October 1, 2025
    மாநிலம்

    டெட் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

    October 1, 2025
    மாநிலம்

    அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 

    October 1, 2025
    மாநிலம்

    ‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம்

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்
    • பலன் கொடுக்குமா பள்ளபட்டி ஜாதகம்? – அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தை சுற்றும் உடன்பிறப்புகள்!
    • எங்களுக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொகுதி வேணும்! – பாஜக கோரிக்கையால் கதிகலங்கும் கோவை அதிமுக
    • கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை
    • ஆங்கிலத்தில் பாபுகோஷா என்ன அழைக்கப்படுகிறது: அதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.