Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் நெரிசல் சம்பவ விசாரணையில் இருந்து அருணா ஜெகதீசன் விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ்
    மாநிலம்

    கரூர் நெரிசல் சம்பவ விசாரணையில் இருந்து அருணா ஜெகதீசன் விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ்

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் நெரிசல் சம்பவ விசாரணையில் இருந்து அருணா ஜெகதீசன் விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அறிவுரை கழக உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார்.

    கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உடனடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைத்தின் விசாரணை சந்தேகத்திற்கு உரியது. அரசு பணத்தில் சலுகை பெறுபவர் எப்படி நேர்மையானவராக இருப்பார்.

    மேலும், தென்மண்டல அறிவுரைக்கழக ஆலோசனை குழு உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நேர்மையாக இருக்கும் என கூறமுடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

    ஆனால், காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சரியாக இருக்காது. என்ன நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்படுகிறது? அதன் செயல்பாடுகள் என்ன? என முறையான அறிவிப்புகளை அரசு வெளியிடாமல், அவசரகதியில் அமைக்கப்பட்ட ஆணையம் மக்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.

    கட்சி கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலைவையில் உள்ள நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் பேரில் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது நீதிமன்ற விசாரணைக்கு எதிரானது.

    மக்களுக்கு முறையான அறிவிப்புகள் இல்லாமல் திடீரென சந்தித்து விசாரணை நடத்துவது அரசியல் காரணங்களுக்கு தான் என தெரிவித்த அவர், அருணா ஜெகதீசன் ஆணையத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

    September 30, 2025
    மாநிலம்

    விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: பாஜக சதியை முறியடிக்க காங்கிரஸுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

    September 30, 2025
    மாநிலம்

    ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்…’ – கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றாவிட்டால் அதிமுக சார்பில் சட்ட நடவடிக்கை: இன்பதுரை எம்.பி தகவல்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எண்ணூர் விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
    • இதய ஆரோக்கியம்: நாம் தூங்கும்போது மாரடைப்பைத் தடுக்க உதவும் சிறந்த சுவாச பயிற்சியை ஹெல்த் குரு பகிர்ந்து கொள்கிறார்
    • “அதிகாரத்துக்கான தீராத பசி” – கரூர் சம்பவம் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!
    • விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்
    • மூல செல்ல உணவு: உங்கள் செல்லப்பிராணிகளுக்கு மூல இறைச்சியை உண்பதா? உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது ஏற்படக்கூடிய கொடிய அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.