Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்
    மாநிலம்

    கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

    adminBy adminOctober 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது.

    கரூர் – கோவை சாலை மற்றும் மேற்கு பிரதட்சணம் சாலை சந்திப்பில் முத்து குமாரசாமி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்து கொண்ட இப்பேருந்து நிலையம் 1987ம் ஆண்டு நவம்.23ம் தேதி திறக்கப்பட்டது.

    இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்த முடியும். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் 2002-ம் ஆண்டு முதல் புதிய பேருந்து நிலைய கோரிக்கை எழுந்து வந்தது. இதற்காக சுக்காலியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

    கடந்த 2013ம் ஆண்டு கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் வழக்குகளால் பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    புதிய பேருந்து நிலையம் திறப்பு: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 12.14 ஏக்கரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கின. மீண்டும் வழக்குகள் காரணமாக பணிகள் முடங்கின. அதன் பிறகு வழக்குகள் முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 9ம் தேதி புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுதல் உள்ளிட்ட பணிகளால் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு 2 மாதங்களுக்கு மேலான நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் செப்.20ம் தேதி நடைபெற்றது.

    புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து தமிழக அரசுப் போக்கு வரத்துக் கழக கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் கோட்டங்கள் மற்றும் கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மண்டலங்கள் அலுவலர்களுக்கு செப்.30ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கரூர் மண்டல (நேர காப்பாளர்) அலுவலகத்தில் நடந்த பூஜையில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா. ( படங்கள்: க.ராதாகிருஷ்ணன் )

    பேருந்து சேவை தொடக்கம்: கரூர் மாவட்டம் திருமாநிலையூர் முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது. இதனையொட்டி கரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கரூர் மண்டல நேர காப்பாளர் அலுவலகத்தில் பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்வில், ஆணையர் கே.எம்.சுதா, கரூர் மண்டல பொது மேலாளர் (பொ) டி.சதீஷ்குமார், உதவி பொறியாளர் (போக்குவரத்து) முருகானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உணவு விடுதி, தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் வெளியே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுகிறது.

    புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. வெளியூர்களில் இருந்து புறநகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தன. துணை மேயர் ப. சரவணன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகள் தொடங்கியதை பார்வையிட்டார்.

    பேருந்து வழித் தடங்கள்: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தாராபுரம், பொள்ளாச்சி மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் முத்துகுமார சாமி பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்து வந்த வழித் தடத்திலேயே திரும்ப செல்ல வேண்டும்.

    மதுரை, திண்டுக்கல், பழநி மார்க்கமாக வரும் பேருந்துகள் சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து மீண்டும் அதே வழியாக திரும்ப வேண்டும். திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (குஜிலியம்பாறை) மார்க்கமாக வரும் பேருந்துகள் திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து, அதே வழியாக திரும்ப வேண்டும்.

    நகரப் பேருந்துகள் முத்துகுமார சாமி பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும். மேலும் பொதுமக்கள் வசதிக்காக முத்து குமாரசாமி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்து நிலையம் செயல்படுவது தொடர்பான அறிவிப்பு பதாகைகள் கரூர் மாநகராட்சி சார்பில் முத்துகுமார சாமி பேருந்து நிலையம், லைட்ஹவுஸ் முனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

    October 7, 2025
    மாநிலம்

    கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    October 7, 2025
    மாநிலம்

    டிடிகே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர், கழிவுநீர் பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    October 7, 2025
    மாநிலம்

    முறைகேடு கண்டறியப்பட்டால் ஜல்ஜீவன் நிதி நிறுத்தப்படும்: தமிழக அரசுக்கு பாஜக அறிவுறுத்தல் 

    October 6, 2025
    மாநிலம்

    “இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை

    October 6, 2025
    மாநிலம்

    தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருவதாக கூறுவது அபத்தம்: அண்ணாமலை

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி
    • உங்கள் தூக்க சுழற்சியை மீட்டமைக்கவும்: சில நிமிடங்கள் காலை சூரிய ஒளி உங்கள் தூக்கத்தை சரிசெய்ய முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
    • தொடர்ச்சியான இரத்தப்போக்கு ஈறுகள்: இங்கே ஏற்படுத்தக்கூடிய நோய்கள் இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசாவின் விடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தில் மர்மமான விண்மீன் வால் 3i/அட்லஸைப் பிடிக்கிறது: இது ஏலியன் ஆய்வு அல்லது ஒரு அண்டக் கலைப்பொருள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.