Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு
    மாநிலம்

    கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது.

    கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மறுநாளே விசாரணையை தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், 2 நாட்கள் விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே, நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சூழலில், வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளாதேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று கரூர் வந்து விசாரணையை தொடங்கினர். தவெக பிரச்சாரகூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்ற குழுவினர், நெரிசல் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் நகர காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் மோகன்ராஜ் ஆகியோரிடம் அஸ்ரா கார்க் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இந்த குழுவில் என்னுடன் 2 எஸ்.பி.க்கள், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளதால், குறிப்பிட்டு எதுவும் கூறமுடியாது” என்றார்.

    உயர் நீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 3-ம் தேதி நடந்தது. அப்போது, ‘‘விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக காணொளிகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா?’’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் அளித்த புகாரின்பேரில், விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 2 பேர் மீது பிஎன்எஸ் 281 (அதிவேகமாக, கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது) பிரிவில் போலீஸார் 4-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்

    October 6, 2025
    மாநிலம்

    தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

    October 6, 2025
    மாநிலம்

    விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்

    October 6, 2025
    மாநிலம்

    “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

    October 6, 2025
    மாநிலம்

    அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை

    October 6, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு தமிழகத்தில்தான் அதிகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு 

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காவல் துறை அனுமதி மறுத்ததால் பழனிசாமியின் பிரச்சார பயணம் 3-வது முறையாக மாற்றம்
    • இடைவெளி நடைபயிற்சி: இந்த 3 நிமிட ஜப்பானிய நடைபயிற்சி நுட்பம் ஏன் ஜாகிங்கை விட அதிக நன்மைகளைத் தரும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்
    • “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.