Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
    மாநிலம்

    கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    adminBy adminSeptember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது.

    கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று மனு தாக்கல் செய்தார்.

    உயர் நீதிமன்றத்திற்கு தற்போது தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தவெக மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற பதிவுத்துறை, மனு தாக்கல் செய்தால் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் அக்.3-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.

    கரூர் சம்பவம் காரணமாக தவெக-வுக்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த செல்வக்குமார், கே.கே. ரமேஷ் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது: ”கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. விஜய் பிரச்சாரத்தின் போது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர கதியில் உடற்கூராய்வு செய்துள்ளனர். இதற்கு என்ன அவசியம் வந்தது?

    போலீஸார் விதித்த நிபந்தனைகளை தவெக-வினர் மீறவில்லை. அனைத்து இடங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பிரச்சாரம் நடைபெறுவதற்கு முன்பே ஏதோ பெரிய சம்பவம் நடைபெறுவதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளோம்.” என்று வழக்கறிஞர் அறிவழகன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவால் தான் சந்தேகமே” – காரணம் அடுக்கும் பழனிசாமி

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு

    September 29, 2025
    மாநிலம்

    பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது நாமக்கலில் வழக்குப் பதிவு

    September 29, 2025
    மாநிலம்

    யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தது பாஜக

    September 29, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவால் தான் சந்தேகமே” – காரணம் அடுக்கும் பழனிசாமி
    • ஒற்றைத் தலைவலி வலியை இயற்கையாகவே தலைகீழாக மாற்றவும்: மறைக்கப்பட்ட அக்குபிரஷர் புள்ளிகள் மற்றும் தலைவலியைக் குறைப்பதற்கும் ஆற்றலை அதிகரிப்பதற்கும் எளிய நுட்பங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐரோப்பிய நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.1 முதல் அமல்: பியூஷ் கோயல்
    • கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு
    • மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிலை என்ன? – 19 மாதம் கடந்தும் மத்திய அரசு பரிசீலனை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.