Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், நாமக்​கல் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு அமைக்​கப்​படு​கிறது. வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிறப்பு புல​னாய்வு குழு வசம் கரூர் போலீ​ஸார் உடனடி​யாக ஒப்​படைக்க வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

    யார் இந்த அஸ்ரா கார்க்? – அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழகப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட இவர் முதன்முதலில் ஏற்றுக் கொண்ட பொறுப்பு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர். 2008-ல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆனார். கந்துவட்டிக் கொடுமையால் சிக்கித் தவித்த நெல்லையில் அவரது நடவடிக்கைகள் அதிரடியாக அமைந்தது.

    அதன்பின்னர் 2010-ல் அவர் மதுரை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார் வழக்குகளை அவர் கையாண்ட விதம் அவர் மீது கவனத்தைத் திருப்பியது. 2016-ம் ஆண்டு மத்திய பணிக்குச் சென்றார். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வோடு தமிழகத்துக்கே வந்தார். 2022-ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருக்கிறார். நேர்மை, துணிச்சலுக்கு பெயர்பெற்ற அஸ்ரா கார்க் காவல்துறையின் பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அமைத்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு

    October 4, 2025
    மாநிலம்

    “உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்” – தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி

    October 4, 2025
    மாநிலம்

    வேலைவாய்ப்பு பயிற்சித் துறை நடத்திய தனியார் முகாம்கள் மூலம் 2.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

    October 4, 2025
    மாநிலம்

    வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    October 4, 2025
    மாநிலம்

    சென்னையில் தெரு நாய்கள், செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடக்கம்

    October 4, 2025
    மாநிலம்

    கரூருக்கு விரைந்த ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 102 வயதான யோகா ஆசிரியர் யோகா, வழக்கமான மற்றும் சமூகம் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், வாழ்க்கை நிறைந்ததாகவும் இருப்பதற்கான ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா மூடுகிறது: முக்கியமான செயல்பாடுகளுக்கு மத்தியில் பழமையான விண்வெளி நிறுவனம் ஏன் செயல்படுவதை நிறுத்தியது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாடகர்  ஜுபின் கார்க் மரண வழக்கு: படகில் உடன் சென்ற 2 இசைக் கலைஞர்கள் கைது
    • நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அருள்நிதி படம்
    • கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.