Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்
    மாநிலம்

    கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தவெக பரப்​புரை​யில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும் என அதி​முக, பாஜக, பாமக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

    அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு மக்​களின் உணர்​வாக மக்​களின் சந்தேகங்களை பதிவு செய்​திருந்​தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்​லாமல், சமூக வலை​தளங்​களில் அவதூறு பரவுவ​தாக கூறி​யிருக்​கும் முதல்​வரின் போட்​டோஷூட் வீடியோவே, தமிழகத்​துக்கு வாய்த்​திருக்​கும் முதல்​வர் எப்​படிப்​பட்​ட​வர் என்​ப​தற்கு சாட்​சி.

    காவல்​துறை பிரச்​சா​ரம் செய்ய ஒதுக்​கிய இடத்​தில் குளறு​படிகள், திமுக​வின் வழக்​க​மான ஆம்​புலன்ஸ் அரசி​யல், தடியடி நடந்த காட்​சிகள் இவை எல்​லாம் வதந்​தி​யா? கள்​ளக்​குறிச்​சி​யில் ஏற்​பட்ட கள்​ளச்​சா​ராய மரணங்​களுக்கு கனக்​காத இதயம், கலங்​காத கண்​கள், இப்​போது மட்​டும் கலங்​கு​கிற​தா, இதில் இன்​னும் கொடுமை​யாக முதல்​வர் அமைத்த ஒருநபர் விசா​ரணை ஆணை​யம் விசா​ரிக்​கும் காட்​சிகள் ஊடகங்​களில் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கின்​றன.

    அதைப் பார்க்​கும் மக்​களுக்​கே, இது ஒருதலைபட்​ச​மான அரசின் தவறுகளை மூடி மறைக்​கும் கண்​துடைப்பு ஆணை​யம் என்​ப​தைக் காட்​டு​கிறது. எனவே கரூர் துயரத்​துக்​கான உரிய நீதி கிடைக்க சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்.

    பாமக தலை​வர் அன்​புமணி: கரூர் உயி​ரிழப்பு விவ​காரத்​தில், காவல்​துறை​யின் செயல்​பாடு​கள் சந்​தேகத்தை எழுப்​பு​கின்​றன. காவல்​துறை​யினர் நினைத்​திருந்​தால் விஜய் பரப்​புரைக்கு கூடு​தல் பரப்​பளவுள்ள இடத்தை ஒதுக்​கி​யிருக்​கலாம். கூடு​தலாக வருபவர்​களை நகரத்​துக்​குள் நுழைய விடா​மல் தடுத்​திருக்​கலாம். ஆனால், இதை​ செய்​யாதது தான் விபத்​துக்கு வழி வகுத்​த​தாக தெரி​கிறது.

    ஆனால், விசா​ரணை தொடங்​கும் முன்பே செய்​தி​யாளர்​களை சந்​தித்த தமிழக காவல்​துறை தங்​கள் மீது எந்​தத் தவறும் இல்​லை. அனைத்​துத் தவறுகளும் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தவர்​கள் மீது தான் என்று குற்​றம்​சாட்​டி​யிருக்​கிறது. பின் எப்​படி விசா​ரணையை நியாய​மாக நடத்த முடி​யும், இதனால் மரணங்​களின் பின்​னணி​யில் உள்ள மர்​மங்​கள் மூடி மறைக்​கப்​படும். எனவே, சிபிஐ விசா​ரணைக்கு அரசு ஆணை​யிட வேண்​டும்.

    தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: உயிரிழப்பு சம்​பவத்​தில் கண்​துடைப்​புக்​காக திமுக அரசு நியமித்​துள்ள முன்​னாள் உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான குறுகிய கால விசா​ரணை அறிக்​கை​யால் எந்​த​வித பயனும் ஏற்​ப​டாது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்​தாமல் உடனடி​யாக சிபிஐ விசா​ரணையை அறிவிக்க வேண்​டும்.

    குறிப்​பாக இறந்​தவர்​களின் உடலை பிரேத பரிசோதனை செய்​வ​தில் முழு கவனம் செலுத்தி வெளிப்​படைத் தன்​மை​யுடன் தமிழக அரசு செயல்பட வேண்​டும். இதே​போல் பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் உள்​ளிட்​டோரும் கரூரில் நடந்த உயி​ரிழப்​பு​கள்​ குறித்​து சிபிஐ வி​சா​ரணைக்​கு வலி​யுறு​த்​தியுள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் 2-வது நாளாக விசாரணை

    October 1, 2025
    மாநிலம்

    ‘கரூருக்கு தம்பி விஜய் போகலைன்னா என்ன? அண்ணன் நான் சென்றேனே…’ – சீமான் பதில்!

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள்  நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

    October 1, 2025
    மாநிலம்

    பலன் கொடுக்குமா பள்ளபட்டி ஜாதகம்? – அரவக்குறிச்சிக்காக அறிவாலயத்தை சுற்றும் உடன்பிறப்புகள்!

    October 1, 2025
    மாநிலம்

    எங்களுக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொகுதி வேணும்! – பாஜக கோரிக்கையால் கதிகலங்கும் கோவை அதிமுக

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் விசாரணை

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் 2-வது நாளாக விசாரணை
    • ‘கரூருக்கு தம்பி விஜய் போகலைன்னா என்ன? அண்ணன் நான் சென்றேனே…’ – சீமான் பதில்!
    • கரூர் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள்  நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்
    • குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அறிகுறிகள்: ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கான 5 எச்சரிக்கை அறிகுறிகள் (மற்றும் அதை எவ்வாறு மேம்படுத்துவது)
    • கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.