Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, January 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? – முழு விவரம்
    மாநிலம்

    ​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? – முழு விவரம்

    adminBy adminSeptember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? – முழு விவரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 36 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் நேற்​றிரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய காவல் துறை தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 3 மணிக்​குப் பிறகு​தான் விஜய் அங்​கிருந்து கிளம்​பி​னார்.

    இதற்​கிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதலே தொண்​டர்​கள், ரசிகர்​கள் திரள ஆரம்​பித்​தனர். கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்​துக்கு விஜய் வர முடிந்​தது.

    அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​கினர். விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அப்​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சா​ரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.

    அங்​கிருந்து ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் 8 குழந்​தைகள், 16 பெண்​கள் உட்பட மொத்​தம் 36 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​கள் அனை​வரின் உடல்​களும் கரூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை பிரேதப் பரிசோதனைக் கூடத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன. 40-க்​கும் அதி​க​மானோர் சிகிச்​சை​யில் உள்​ளனர். இதில் சிலர் கவலைக்​கிட​மான நிலை​யில் உள்​ளனர்.

    உயி​ரிழந்​தவர்​கள், சிகிச்​சை​யில் உள்​ளோரின் குடும்​பத்​தினரும், உறவினர்​களும் மருத்​து​வக் கல்​லூரி முன்பு குழு​மி​யுள்​ளனர். அவர்​கள் கதறி அழுது துடித்​த​தால் அப்​பகுதி முழு​வதும் சோகமய​மாக காட்​சி​யளித்​தது.

    தலைகுனிந்​த​படி சென்ற விஜய்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்​கிய​தாக தகவல் தெரிய​வந்​ததும், பேச்சை சுருக்​க​மாக முடித்​துக் கொண்ட விஜய், அங்​கிருந்து திருச்​சிக்கு புறப்​பட்​டார். கார் மூலம் திருச்சி வி​மான நிலை​யத்​துக்கு வந்த விஜ​யிடம் செய்​தி​யாளர்​கள், ‘‘கரூரில் உங்​கள் பிரச்​சா​ரத்​துக்கு வந்​தவர்​களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்​கும் அதி​க​மானோர் உயிரிழந்​துள்​ளார்​களே?’’ என கேட்​ட​போது, எந்​த கருத்​தும்​ கூறாமல்​, தலை​யைக்​ குனிந்த படி சென்​றார்​.

    கரூர் சம்​பவம் குறித்து தகவலறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், உடனடி​யாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை தொடர்​பு​கொண்​டு, பாதிக்​கப்​பட்​டோரை மீட்​க​வும், அவர்​களுக்கு உரிய மருத்​துவ சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, 50-க்​கும் அதி​க​மான ஆம்​புலன்​ஸ்​கள் சம்பவ இடத்​துக்கு சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்​டன. அவர்​களுக்கு உரிய சிகிச்சை அளிப்​ப​தற்​கான பணி​களை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இருந்​த​படி செந்​தில் பாலாஜி தீவிரப்​படுத்​தி​னார். இதற்​கிடை​யில், நேற்று இரவு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கரூருக்​குப் புறப்​பட்​டார்.

    தலை​வர்​கள் இரங்​கல்: கரூர் சம்​பவத்​துக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

    ரூ.10 லட்​சம் நிவாரணம்: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.10 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு ரூ.1 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார். மேலும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்க முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6,000 ஆண்டுகள் பழமையான வாக்கி-டாக்கி: தொலைதூர தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படும் வரலாற்றுக்கு முந்தைய குண்டுகளை விஞ்ஞானிகள் புதுப்பிக்கின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் இருட்டில் தனியாக இருக்கிறேன்’: டிரம்பின் வியத்தகு நிதி திரட்டும் மின்னஞ்சல் ஆன்லைன் விமர்சனத்தைத் தூண்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரண்டு வாலிபர்களுக்கு மரணதண்டனை: இரட்டை கொலைகாரனுக்கு வரி செலுத்துவோருக்கு £7,500 வழங்கப்பட்டது. ஆறு இலக்க சட்ட மசோதா | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முடி வளர்ச்சிக்கு எந்த மெக்னீசியம் சப்ளிமெண்ட் சிறந்தது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய 10 வகையான பாம்பு செடிகள்: குறிப்புகள் மற்றும் பல – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.