Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, December 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
    மாநிலம்

    கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    adminBy adminSeptember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கருவின் பாலினத்தை தெரிவித்தால் நடவடிக்கை: அரசு மருத்துவர்களுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை தெரிவிக்​கும் அரசு மருத்​து​வர் மீது துறைரீதி​யாக மட்​டுமின்​றி, காவல் துறை மூல​மாக​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

    மாதவரம் புனித அன்​னாள் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி வளாகத்​தில் `நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாம் நேற்று நடந்​தது. இந்த முகாமில் மக்​களுக்​கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்​றும் ஆய்​வகப் பரிசோதனை​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பார்​வை​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வச் சான்​றிதழினை வழங்​கி​னார்.

    மாதவரம் எம்​எல்ஏ சுதர்​சனம், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி ஆகியோர் உடன் இருந்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: முதல்​வர் ஸ்​டா​லின் கடந்த ஆக. 2-ம் தேதி நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இந்த திட்​டத்​தில் 17 வகை​யான சிறப்பு மருத்​துவ சேவை​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது 6-வது வார​மாக தமிழகம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

    ஒவ்​வொரு வார​மும் சனிக்​கிழமை காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை முகாம் நடை​பெறுகிறது. இது​வரை 5 வாரங்​களாக 185 முகாம்​கள் நடத்​தப்​பட்​ட​தில் 2,60,910 பேர் பயன் பெற்​றுள்​ளனர். கடந்த இரண்டு வாரங்​களுக்கு முன்பு ஒரு மருத்​து​வர் நடத்தி வரும் ஸ்கேன் சென்​டரில், கரு​வில் உள்ள சிசு பாலினம் தெரி​வித்த புகார் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதே​போல, சேலம் பகு​தி​யில் ஒரு ரேடி​யாலாஜி மருத்​து​வர் கரு​வில் உள்ள பாலினம் குறித்து தெரி​வித்​த​தாக புகார் வந்​தது. அவர் மீது துறைரீதி​யாக நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டு, காவல் துறை​யிலும் புகார் தரப்​பட்​டுள்​ளது. சம்​மந்​தப்​பட்​ட​வர்​கள் மீது சட்டரீதி​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

    இதுபோன்ற செயல்​கள் செய்​யக்​கூ​டாது. இது மனி​தாபி​மானமற்ற செயல். தமிழகத்​தில் ஆண் குழந்​தை​யாக இருந்​தா​லும்,பெண் குழந்​தை​யாக இருந்தா​லும்இரண்​டும் சமம் என்ற வகை​யில்பாவிக்​கப்​பட்டு வருகிறது. கரு​வில்உள்ள பாலினத்தை தெரிவிக்​கக்கூடாது என்​பது தொடர்பாக அரசுபல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அரசு மருத்​து​வர்​கள் இந்த மாதிரி​யாக செயல்​களை செய்​வதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. அரசு ஊழி​யராக இருந்​தால், விதி​முறை​களின்​படி துறைரீதி​யான நடவடிக்​கை, சட்ட நடவடிக்​கை, காவல் துறை நடவடிக்கை மட்​டுமே மேற்​கொள்​ளப்​படும். சொத்​துகள் முடக்​கு​வது என்​பது போன்​ற நடவடிக்​கைகள்​ எல்​லாம்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பல் துலக்க சரியான நேரம் எப்போது: காலை உணவுக்கு முன் அல்லது பின்? நிபுணர்கள் பரிந்துரை என்ன தெரியுமா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சோர்வு முதல் மங்கலான பார்வை வரை: இந்த உடல்நலப் பிரச்சினைகள் நீரிழிவு நோயைக் குறிக்கும் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எந்தெந்த தெய்வச் சிலைகளை ஒன்றாக வைக்கக் கூடாது? உங்கள் வீட்டுக் கோவிலுக்கான அத்தியாவசிய விதிகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடிபோதையில் ரக்கூன் மதுக்கடைக்குள் புகுந்து, ஸ்காட்சை கீழே இறக்கி, குளியலறையில் வெளியே சென்றது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மலாக்கா அரோராவின் யோகா ரகசியங்கள்: உடல் மற்றும் மனதுக்கு 5 தொடக்க நட்பு போஸ்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.